Pages

Sunday, November 6, 2011

நிகரன் விடைகள்


அண்ணா அசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரேவால், கிரண்பேடி போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வீசப்படுகிறதே?

இவர்கள் மீது சாற்றப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் வலுவல்லாதவை. இக்குற்றச்சாட்டுகளால் அண்ணா அசாரே குழுவினருக்குள்ள மக்கள் ஆதர வைக் குறைத்துவிட முடியாது. ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வந்த நன்கொடை தமது அறக்கட்டளைக் கணக்கில் வரவு வைத்து விட்டார் கெஜ்ரேவால் என்கிறார்கள்.  அதுவும் செயல்படும் அறக்கட்டளை தான். பயணச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் மிச்சத் தொகையைத் தரவில்லை கிரேண்பேடி என்கிறார்கள். இது ஓர் ஊழல் நடவடிக்கையே அன்று. 
அண்ணா அசாரேயின் இந்திய தேசிய வெறிதான் மிகவும் ஆபத்தாக உள்ளது. அவரோடு சேர்ந்து காங்கிரசு அரசின் ஊழலை எதிர்த்தும், மக்கள் நீதி மன்ற(லோக்பால்) சட்டத்திற்காகவும் போராடி வருபவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன். அவர் ஒரு கருத்தரங்கில் இந்தியாவோடு இருப்பதா வேண்டாமா என்பதைக் காசுமீர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அதற்காகக் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார். 
இவ்வாறு கருத்துச் சொன்னதற்காக ஆர்.எஸ். எஸ். பரிவாரங்களில் இராம் சேனை என்ற அமைப்பினர் பிரசாந்த் பூசனை அவரது அலுவலக அறைக்குள் புகுந்து கடுமையாகத் தாக்கினர். இத்தாக்கு தலை மிகவும் மென்மையாகக் கண்டித்த அசாரே, பிரசாந்த் பூசன் கருத்தைக் கடுமையாகத் தாக்கினார். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேள்வி கேட்பவர்களுக்குத் தமது அமைப்பில் இடம் இல்லை என்றார்.  காசுமீரை இந்தியாவுடன் வைத்துக் கொள்வதற்காகப் போராடத் தயார் என்றார். பாகிஸ்தானோடு போர் ஏற்பட்டால் மீண்டும் பட்டாள உடுப்பைப் போட்டுக் கொண்டு போர் புரிய அணியமாக உள்ளேன் என்றார். 
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அண்ணா அசாரேக்கு, காசுமீரைப் பிடித்து வைத்துக் கொள்வதில் இவ்வளவு ஏகாதிபத்திய வெறி இருந்தால்,  காசுமீர் மண்ணின் மக்களுக்குத் தங்கள் தாய்மண் விடுதலைக்குப் போராடுவதில் எவ்வளவு உக்கிரம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதில் அண்ணா அசாரேயின் குரல் ஆர்.எஸ். எஸ்.குரல். இது மிகவும் ஆபத்தானது.  

சிவசேனையைப் போல் இன உணர்வுள்ள ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருந்தால் போதும் சில தமிழ்த் தேசியர்கள் கூறுகிறார்கள். உங்கள் கருத்தென்ன?

கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வதும், சிவசேனையை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் கட்சியை அமைப்பதும் ஒன்றுதான். 
சிவசேனை உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலத்தவர் மராட்டியத்தில் குவிவதை எதிர்க்கிறது என்பதற்காக அக்கட்சியைத் தமிழ்த் தேசியத்திற்கான முன்மாதிரி அரசியல் வடிவமாகக் கருதக் கூடாது. 
சிவசேனை இந்துத்துவா அமைப்பு. இந்திய தேசிய வெறி அதன் இலட்சியம். காசுமீரில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கருத்துக் கூறியதற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனை இராம் சேனைக் குண்டர்கள் தாக்கினர். அவ்வாறு தாக்கியவர்களைப் பாராட்டினர் பால்தாக்கரே. ஏற்கெனவே பாபர் மசூதியை நாங்கள் தான் இடித்தோம் என்று பெருமையாகத் தம்பட்டம் அடித்தார் பால்தாக்கரே!
சிவசேனை என்பது இந்திய ஏகாதிபத்தியத்தின் மராட்டியச் சேனை. இந்துத்துவா அமைப்பே வெளியாரை வெளியேற்றுகிறது என்று, நாம் கூறுவது நமது தமிழ்த் தேசியம் சார்ந்த வெளியார் ஆக்கிரமிப்புப் போராட்டத்தின் ஞாயப்பாட்டை வலுப்படுத்த மட்டுமே பயன்படும்! பகை முகாமில் இருக்கும் உள் முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது அது. 

ஊழலை ஒழிக்க ஊர்திப் பயணம் நடத்துகிறாரே அத்வானி?

பாரதிய சனதாக் கட்சியில் உள்ள ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க அத்வானி என்ன பயணம் நடத்தப் போகிறார்?
பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் தனியார் நிறுவனத் திடம் கையூட்டு வாங்கியதைக் கையும் களவுமாகப் பிடித்து அம்பலப்படுத்தியது டெகல்கா இணையத் தளம். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறான தொழிலுக்குப் பெண்களை ஏற்றுமதி செய்து பிடிபட்டார்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நலன்களுக்காக, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிப் பிடிபட்ட மக்களவை உறுப்பினர்களில் பெரும்பாலோர் பா.ச.க. வைச் சேர்ந்தவர்களாவர். 
கர்நாடகத்தில் பா.ச.க. ஆட்சி நடக்கிறது. பா.ச.க. முதல்வர் எடியூரப்பா ஊழல் திருவிளையாடல் நடத்தி மாட்டிக் கொண்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். சுரங்கக் கொள்ளைக்காரர்களான ரெட்டி சகோதரர்கள் கர்நாடகத்தில் பா.ச.க. அமைச்சர்கள். அவர்களில் மூத்தவர் ஜெனார்த்தன ரெட்டி, சி.பி.ஐ. போட்ட வழக்கில் ஆந்திரப் பிரதேச சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இந்த ரெட்டி சகோதரர்களின் கொள்ளைப் பணத்தில் ஒரு பகுதி பா.ச.க. வின் மக்களவைக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராசுக்குப் போகிறது. சுஷ்மாவின் செல்லப் பிள்ளைகள் ரெட்டி சகோதரர்கள்.
மன்மோகன் சிங் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரிக்கப் பணம் வாங்கியதாக பா.ச.க. முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் பகன்சிங் குலஸ்தே, மற்றும் மகாவீர் சிங் பகோரா ஆகிய இருவரும் அண்மையில் தளைப்படுத்தப் பட்டனர். 
ஊழல், கருப்புப் பணம், பதவி வேட்டை உள்ளிட்ட சீரழிவுப் பண்பாட்டிலும் ஒழுக்கக் கேட்டிலும் ஊறித் திளைக்கும் கட்சி பா.ச.க. ஊழல் அரசியலில் காங்கிரசும் பா.ச.க.வும் ஒரு கரு இரட்டையர்கள்! பா.ச.க.வின் மூத்த தலைவர் அத்வானி, ஊழல் ஒழிப்பு ஊர்திப் பயணம் நடத்துவது இராசபட்சே மனித உரிமைப் பரப்புரை செய்தால் எப்படியோ அப்படித்தான். 

கூடங்குளம் அணு உலை குறித்து தி.மு.க.வின் நிலைபாடு என்ன?

மன்மோகன் சிங் நிலைபாடுதான்! கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்று பெருமெடுப்பில் பரப்புரை செய்ய வேண்டும். அதே வேளை கூடங்குளம் அணுமின் திட்டத்தைத் திட்டமிட்டபடி தொடங்க வேண்டும் என்பது இந்திய அரசின் நிலைபாடு. மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கிவிட்டு கூடங்குளம் திட்டத்தைத் தொடங் குங்கள் என்று அண்மையில் மகளைப் பார்க்க தில்லி போன கருணாநிதி மன்மோகன் சிங்கிடம் நேரில் கூறியுள்ளார். இது ஏடுகளில் வந்தது. 


காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் செயலலிதா கோருவது சரியா?

முதலமைச்சர் செயலலிதாவின் இக்கோரிக்கை பிழையானது. காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில், தமிழகத்திற்குரிய காவிரி நீரை மிகவும் குறைத்து விட்டது. அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்று கூறி இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டுள்ளது.  இப்பொழுது தமிழக அரசே, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கோருவது தமிழக அரசு தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளும் முயற்சியாகும்.
இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்போ 192 ஆ.மி.க. கர்நாடகம் தரவேண்டும் என்று கூறுகிறது.  அதில் 10 ஆ.மி.க. சுற்றுச் சூழலுக்காகவும், கடலில் வீணாகக் கலக்கும் நீர் 4 ஆ.மி.க. என்று கணக்கிட்டு அதையும் கர்நாடகத்தில் பிடித்தம் செய்து கொள்வது என்றும் இறுதித் தீர்ப்பு கூறுகிறது.  இந்த 14 ஆ.மி.க. தமிழகத்திற்குரிய 192 ஆ.மி.க.வில் கழித்துக் கொள்ளப்படும். மிஞ்சுவது 178 ஆ.மி.க. மட்டுமே. இது மிக மிகக் குறைவான தண்ணீராகும்.
இறுதித் தீர்ப்பான 192 ஆ.மி.க.வை அரசிதழில் வெளியிட்டு விட்டால் பிறகு தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் உருப்படியான வாதம் எதுவுமிருக்காது. 
இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக, கேரள, புதுவை அரசுகளும் வழக்குப் போட்டுள்ளதால் அவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் வரை இடைக்காலத் தீர்ப்பே செயலில் இருக்க வேண்டும்.  இடைக்காலத் தீர்ப்பை 1991 நவம்பரில் நடுவணரசு தனது அரசிதழில் வெளியிட்டு அதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.  அதை மீண்டும் உறுதிப்படுத்த உச்சநீதி மன்றத்திடம் இடைக்கால ஆணை கோரலாம். அல்லது மீண்டும் அரசிதழில் வெளியிட இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தலாம்.  
இந்நாள் முதல்வர் செயலலிதாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இறுதித் தீர்ப்பை அரசி தழில் வெளியிடுமாறு நடுவணரசைக் கோருவது பெரும் பிழையாகும். தமிழகத்திற்குப் பாதகமாக முடியும்.

ஏகாதிபத்தியங்களின் நச்சுக் குப்பைத் தொட்டி – இந்தியா இளந்தமிழன்


ஏகாதிபத்திய நாடுகள், ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களைத் திணித்து, இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல்வேறு தேசிய இனங்களின் தாயகங் களில் தொழிற்சாலைகள் அமைத்து, அதன் கழிவுகளை இங்கேயே கொட்டிக் கொண்டிருக்கின்றன. இது போதாதென்று, அந்நாடுகளில் உருவாகும் குப்பைகளையும் கப்பல்களில் கொண்டு வந்து இந்தியாவெங்கும் கொட்டி விட்டுச் செல்கின்றன.

ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் செயலழிந்த மின்னணு சாதனங் களால் உருவாகும் மின்னணுக் குப்பைகள், அறுவை சிகிச்சைகளால் வெட்டி எடுக்கப்படும் மனித உறுப்புகள், ஊசிகள், காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான குப்பை களை இந்தியா போன்ற ‘வளரும்’ நாடுகளுக்கு கப்பல்களில் அனுப்பி வருவதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றன.

இக்குப்பைகளில் உள்ள நச்சுப் பொருட்களை, இதனை மறுசுழற்சி அல்லது புதைக்கும் செயல் களில் ஈடுபடும் மக்களுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் உடல்நலக் கேடுகள் உண்டாகின்றன. அவ்வப்போது, இது போன்ற குப்பைகளைக் கொண்டு வரும் மேற்குலக நாடுகளின் கப்பல்கள் பிடிபட்டு இவ்வுண்மை அம்பலப் பட்டிருக்கிறது. இது குறித்து 2007 ஆம் ஆண்டு தமிழர் கண்ணோட்டம் இதழிலும் நாம் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

தற்போது, நம் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ‘த சண்டே இந்தியன்’ வார இதழில், அவ்விதழின் பொருளியல் செய்தித்துறை ஆசிரியர் பிரசூன் மஜூம்தார், 'கிரின்பீஸ்' தன்னார்வ அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அதிலிருந்து நமக்குத் தெரிய வரும் செய்திகள் இவை:

• 2007ஆம் ஆண்டில் இந்தியாவில், செயலிழந்து குப்பைகளில் வீசப்பட்ட கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணுக் குப்பைகளின் அளவு மட்டும் 3,80,000 டன்கள். இது ஆண்டுக்கு 15 விழுக்காடு அதிகரித்து, 2012ஆம் ஆண்டு 8,00,000 டன்களாக உயரும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. 

• 2008ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த கப்பல்களில், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய 800 டன் அளவிலான, மருத்துவக் கழிவுப் பொருட்கள், ஊசிகள், ஆணுறைகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகள் தூத்துக்குடி துறை முகத்திற்கு வந்திறங்கின. 

• சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் அமெரிக்காவின் 180 டன் அளவிலான குப்பைகள் கொண்டு வரப்பட்டன. மேலும், 1000 டன் குப்பைகள் தூத்துக்குடி துறைமுகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. 

• அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமின்றி ஜப்பான் நாடு தடை செய்யப்பட்ட 300 டன் அளவிலான, துத்தநாகத் துகள்கள், கந்தக அமில பேட்டரிக் கழிவுகள், நஞ்சான பி.வி.சி. கழிவுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வேதியியல் கழிவுகளை ஏற்றுமதி செய்கின்றது. 

• இது போன்ற 105 நாடுகள் இந்தியாவில் தங்களின் குப்பைகளைக் கொட்டிக் குவித்து வருகின்றன. 

• இவ்வாறு கொண்டு வரப்படும் குப்பைகளில், உலக வர்த்தக மையத் தாக்குதலில் எஞ்சியிருந்த குப்பைகள் தொடங்கி அணுமின் நிலையங்களின் டைட்டானியக் கழிவுப் பொருட்கள் வரை பலவும் கலந்து இருக்கின்றன.

கோவையில் வழக்கறிஞரைத் தாக்கியக் காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டம்!


வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் தன் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து, கோவை துடியலூர் காவல் நிலையம் சென்றார். அங்கிருந்த, உதவி ஆய்வாளரிடம் இது தவறு என எடுத்துரைத்தார். ஆனால், அந்த ஆய்வாளரும், அங்கிருந்த காவலர் களும் வழக்கறிஞர் கூறிய ஞாயங்களை செவிமடுக்காமல் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின், அதிகார வெறியுடன் வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். படுகாயமடைந்த ஆனந்தீசு வரன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காவல்துறை யினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை அறிந்த வழக்கறிர்கள் துடிய லூர் காவல் நிலையத்தை முற்று கையிட்டனர்.

தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறை யினரை கைது செய்ய வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களை பணியிடை நீக்கம் மட்டும் செய்தார் காவல் கண்காணிப்பாளர்.

இந்நிலையில், வழக்கறிஞரைத் தாக்கிய காவல் துறையினரைக் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு முன் தொடர் முற்றுகைப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் அறி வித்து நடத்தி வருகின்றனர்.

12 நாட்களாக நடந்து வரும் வழக்கறிஞர்களின் முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். காவல்துறையினரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

“ஆங்கிலத்தின் முற்போக்கு” - பகுத்தறிவா? மூடநம்பிக்கையா? நலங்கிள்ளி


ஒரு காலத்தில் நீக்ரோ, கறுப்பர், வருணத்தார் போன்றவை இழிச்சொற்களாகக் கருதப்பட வில்லை. சொல்லப்போனால், இளைய மார்ட் டின் லூதர் கிங் கூட கறுப்பர்களை நீக்ரோ என்றே குறிப்பிட்டார். ஆனால் காலப்போக்கில் கறுப் பின மக்களுக்கு ஒன்று மாற்றி ஒன்று சூட்டப் பட்ட பெயர்கள் எல்லாம் பின்னர் இழிச்சொல் லாகிப் போயின. சமூகத்தளத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் மொழியில் மட்டும் புதுப்புதுச் சொற்களைப் புனைந்து சொல்வதின் மூலம் எந்த மனித இழிவுகளையும் அழித்து விட முடியாது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அட்ட வணைச் சாதியினர், ஆதிதிராவிடர்கள், தலித்து கள் என எந்தப் பெயரைச் சூட்டினாலும் அது அவர்கள் வாழ்நிலையில் எந்த மாற் றத்தையும் கொண்டு வருவதில்லை, உள்ளபடியே அந்தச் சொற்களே கூட அவர்களுக்கான இழிச் சொற்களாகிப் போவதையே நாம் பார்த்து வருகிறோம். சமூக அநீதிகளுக்கு மொழி பொறுப் பாகாது என்பதே இங்கு நாம் உணர வேண்டிய செய்தி.

இன்று கறுப்பின மக்கள் தங்களுக்குள்ள எந்தப் பெயர்களையும் விரும்பவில்லை, அவர்கள் தாங்கள் வாழும் நாட்டைப் பொறுத்துத் தங்களை ஆப்பிரிக்க அமெரிக்கர், ஆப்பிரிக்க பிரெஞ்சுக்காரர், ஆப்பிரிக்க பிரித்தானியர் என்றே அழைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆங்கில மொழி நடை என்றில்லை, ஆங்கிலப் படைப்புகளிலும் கூட மிக எளிதாக இழிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதை மேலே கண் டோம்.

இன்றுங்கூட சிறுவர் கதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என எந்த ஆங்கிலப் படைப்பாக இருந்தாலும் கறுப்பர்களை மறைமுகமாகப் பின்னுக்குத் தள்ளும் செயல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கறுப்பின மக்கள் 1940, 1950களில் வெளியான ஆங்கிலத் திரைப் படங்களில் வேலைக்காரர்கள், விபச்சாரத் தரகர்கள், போக்கிரிகள் போன்ற வேடங் களிலேயே நடித்து வந்தனர். 1970களுக்குப் பிறகு இன்று வரை வெள்ளையர்களின் ஏவலாளாக, உதவியாளராக நடித்து வருகின்றனர். எந்தப் படைப்பிலும் கருப்பினத்தவர் ஒரு வெள்ளை யருக்கு வழிகாட்டு பவராக இருக்க மாட்டார்கள். ராக்கி 4, அபோகேலிப்ஸ் நவ், பிரிடேட்டர் போன்ற ஆலிவுட் மசாலாப் படங்களில் எல்லாம் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் துணைக் கதாபாத்திரத் திரகளில் மட்டுமே நடிப்பார்கள். அவர்கள் வெள்ளைக் கதாநாயகர்களுக்குச் செய்ய வேண் டிய உதவிகளை எல்லாம் செய்து விட்டுக் கடைசியில் உயிரைத் தியாகம் செய்து அவர்களைக் காப்பாற்றுவார்கள் (தமிழ்ப் படங் களிலும் காதலைத் தியாகம் செய்பவர் தானே துணை நாயகர்!)  

ஆங்கிலத்தில் கறுப்பர்களை இழிவுபடுத்தும், வெள்ளையரைப் போற்றும் பழமொழிகள் பல உண்டு. சிலவற்றைப் பாருங்கள்: கருப்பனைக் கருப் பன்னுதானே சொல்ல முடியும் (ஜிஷீ நீணீறீறீ sஜீணீபீமீ ணீ sஜீணீபீமீ), நீ சுதந்திரமானவன் மட்டுமா, வெள் ளையன் நீ, அதுவும் 21 வயது கடந்த இளைஞன் நீ, கொண்டாடு மகனே (சீஷீu’க்ஷீமீ யீக்ஷீமீமீ, ஷ்லீவீtமீ, ணீஸீபீ ஷீஸ்மீக்ஷீ 21); ஒரு கழுதை செத்தால் இன்னொரு கழுதை வாங்கு, பணியில் ஒரு கறுப்பன் செத்தால் இன்னொரு கருப்பனை அமர்த்து (ரிவீறீறீ ணீ னீuறீமீ, தீuஹ் ணீஸீஷீtலீமீக்ஷீ ஷீஸீமீ; ரிவீறீறீ ணீ ஸீவீரீரீமீக்ஷீ, லீவீக்ஷீமீ ணீஸீஷீtலீமீக்ஷீ ஷீஸீமீ); கனி கருக்க, சாறு சுவைக்கும் (ஜிலீமீ தீறீணீநீளீமீக்ஷீ tலீமீ தீமீக்ஷீக்ஷீஹ் tலீமீ sஷ்மீமீtமீக்ஷீ tலீமீ ழீuவீநீமீ - கறுப்புப் பெண்ணைக் காம நோக்கில் செய்யும் நையாண்டி); விறகு வண்டியில் முழிக்கும் கறுப்பன் (ழிவீரீரீமீக்ஷீ வீஸீ tலீமீ ஷ்ஷீஷீபீஜீவீறீமீ - திருட்டுக் கறுப்பர்கள் விறகு வண்டியில் ஒளிந்து கொள்வதை வைத்து உருவான பழமொழி. முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறான் என் னும் தமிழ்ப் பழமொழியுடன் ஒப்பு நோக்குங்கள், புரியும்).

மீனா கந்தசாமி சொல்வது போல் தமிழில் சாதிக் குறியீடு உண்டு என்றால், ஆங்கிலத் திலும் நிறவெறிக் குறியீடு வழிய வழிய உண்டு என்பதை இது வரை தெளிவாகக் கண்டு விட்டோம்.

தமிழ் ஒரு சாதிய மொழி எனக் காட்டுவதற்கு வேறொரு கருத்தையும் அவர் அண்மை யில் வெளிப்படுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் அண்மை யில் விடுதலை நாள் அன்று நடைபெற்ற நீயா? நானா? என்னும் நிகழ்ச்சியில் ஆங்கிலம் கலவாது தமிழ் பேசுவது குறித்து ஒரு விவாதம் நடை பெற்றது. அந்நிகழ்ச்சியில் அவர் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது சரியே என வாதிட் டோரின் பக்கம் நின்று பேசி னார்.

சாதியத் தமிழால் தம் பள்ளி வாழ்க்கையில் தான் பெரும் இன்னல்களைச் சந்தித்ததாகக் கூறினார். அவர் பள்ளியில் அவருடன் படித்தவர்கள் பெ ரும்பாலும் பார்ப்பன மாணவி களாம். அவர்கள் இவர் பேசும் தமிழைக் கிண்டலடித்தார் களாம். வெட்கம் தாங்காமல் இவரும் ஆங்கிலத்தில் பேசித் தன்மானம் காத்துக் கொண்டா ராம். அது மட்டுமல்ல, அவர்கள் ஏச்சிலிருந்து தப்பிக்க அங்கயற்கண்ணி என்ற தம் பெயரை மீனா என மாற்றிக் கொண்டாராம். தன் தமிழ்ப் பெயரிலும் தன் மொழியிலும் நம்பிக்கை வைக்காது சமற்கிரு தத்தின் மீதும், ஆங்கிலத்தின் மீதும் அவர் நம்பிக்கை வைத் தது, தனது தாய்த்தமிழின் மீது அவருக்குள்ள நம்பிக்கையின் மையையே காட்டுகிறது. இங்கு மீனா என்ற பெண்ணின் தனி மனிதச் செயற்பாடுகளை விமர் சிப்பது எனது நோக்கமன்று. இங்கு ஆங்கிலம் தமிழர்களைச் சுற்றி, முற்போக்காளர்களைச் சுற்றி எப்படிப்பட்ட மாய வலையைப் பின்னிவைத்துள் ளது என்பதைப் புரிய வைக்க வே இதைக் குறிப்பிட்டேன்.

மீனா அதைத் தொடர்ந்து ஒரு முக்கியக் கருத்தை முன் வைத்தார். சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி ‘மாமன்’ என்னும் சொல்லுக்கு ‘பறைப்பெண்கள் தங்கள் கண வரை அழைக்கும் பெயர்’  (ஜிணீனீவீறீ லிமீஜ்வீநீஷீஸீ, ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் ஷீயீ விணீபீக்ஷீணீs, தொகுதி 5, பக்கம்: 3162) என்று ஓர் அர்த்தத்தைக் கொடுத்திருப் பதாக மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சாதியைத் தமிழ்ப் பேரகராதியே இழிவுப் படுத்துவதை எப்படிப் பொ றுத்துக் கொள்ள முடியும்? தமிழை ஒரு சாதிய மொழி யாகக் கருதுவதில் என்ன தவறு? என்றெல்லாம் மிக உருக்கமாகக் கேட்டார். இது போலத்தான் மீனாவைப் போன்ற பெரியார் வழிச் சிந்தனையர்களும் தமிழ் இலக்கியங்களில் சாதிக் குப்பை யைத் தவிர வேறொன்று மில்லை என்கின்றனர்.

இங்கும் சொல்கிறேன், தமிழ் இலக்கியங்களின் சாதிய ஆதரவு குறித்தோ, அல்லது மீனா கூறுவது போல் தமிழ்ப் பேர கராதியின் இழிவான சாதிய நோக்கு குறித்தோ விமர் சிப்பதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. தமிழ்ப் பேர கராதி மாமனுக்குக் கூறியுள்ள அந்தப் பொருளை ஒட்டத் துடைத்தெறிய வேண்டும் என்ப தே ஞாயமான மனித நேயப் பார்வையாக இருக்க முடியும். இப்போதும் நமக்கு எழும் கேள்வி, ஆங்கில நூல்கள் அனைத்தும் மாந்தநேயக் கருவூ லங்களா? பார்த்து விடுவோம்.

என்சைக்ளோபிடியா பிரித்தானியா (ணிஸீநீஹ்நீறீஷீஜீணீமீபீவீணீ ஙிக்ஷீவீtணீஸீவீநீணீ) எனப்படும் பிரித்தா னியக் கலைக்களஞ்சியம் உலகப் புகழ்பெற்ற குறிப்பகராதி ஆகும். 1768 முதல் இன்று வரை நான்கு நூற்றாண்டுகளில் தடம் பதித்துப் பல பதிப்புகளைக் கடந்து ஆங்கிலத்தின் மிகப் பழமையான பேரகராதி என்ற பெருமை படைத்தது. இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் நீக்ரோக்கள் என்ற சொல் லுக்குக் கொடுத்த விளக்கம் என்ன எனக் காண்போம்.

1911இல் 11ஆம் பதிப்பாக வெளிவந்த பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் 344ஆம் பக்கத்தில் நீக்ரோக்கள் குறித்து ஒரு கட்டுரை இடம் பெற் றுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதியை அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன், பா ருங்கள்:

நீக்ரோ: சில பண்புக் கூறு களை வைத்துப் பார்க்கும் போது, வெள்ளையர்களுடன் ஒப்புநோக்கின் நீக்ரோக்கள் படிமலர்ச்சித் தட்டில் (மீஸ்ஷீறீutவீ ஷீஸீணீக்ஷீஹ் ஜீறீணீஸீமீ) இன்னுங் கீழே இருப்பவர்கள் என்றும், மனிதக் குரங்கு இனத்தில் (ணீஸீtலீக்ஷீஷீஜீஷீவீபீ) உச்சநிலையில் உள்ள மனிதக் குரங்குகளுக்கு இன்னும் மிக நெருக்கமானவர்கள் என்றும் தோன்றுகிறது.

அறிவு வகையில் நீக்ரோக்கள் வெள்ளையர்களை விடத் தாழ் வானவர்களே. அமெரிக்க நீக் ரோக்கள் குறித்து மிக நீண்ட ஆய்வு செய்து (சமூகவியலர்) ஃபிலிப்போ மனேட்டா முன் வைத்த கருத்து மொத்த இனத் துக்கும் பொதுவாகச் சரியானதே என எடுத்துக் கொள்ளலாம். அவரது கூற்று: “நீக்ரோச் சிறுவர் கள் கூர்மதியும் அறிவுத்திறமும் மாளாத் துடி துடிப்பும் வாய்ந் தவர்கள் என் றாலும், அவர்கள் வயது வந்த பருவத்தை நெருங்க நெருங்க அவர்களிடம் ஒரு மாற்றம் மெதுமெதுவாக ஏற்படத் தொடங்குகிறது. அறிவுத் திறம் மங்கத் தொடங்குவதாகப் படு கிறது, உயிர்த்துடிப்பான இடத் தில் சோம்பல் வந்து குடிபுகு கிறது, சுறுசுறுப்பின் இடத்தைச் சோம்பேறித்தனம் பற்றிக் கொள் கிறது. நீக்ரோக்களின் வளர்ச்சி யும், வெள்ளையர்களின் வளர்ச்சி யும் வெவ்வேறு வழிகளில் நடைபெறுவதாகவே நாம் கருத வேண்டி யுள்ளது. வெள்ளையர் களைப் பொறுத்தவரை, அவர் களின் மூளைப் பருமன் கபால விரி வாக்கத்துக்கு ஏற்ப மென் மேலும் வளர்ந்து செல்கிறது.

ஆனால் இதற்கு நேர்மாறாக நீக்ரோக்களைப் பொறுத்த வரை, அவர்களுக்குக் கபாலப் பொ ருத்துவாய்கள் முற்பட்டு மூடிக் கொள்வதாலும், கபால முன்னெ லும்புகள் மேற்புறத்திலிருந்து அழுத்தம் தருவதாலும் அவர் களின் மூளை வளர்ச்சி தடைப் படுகிறது.”

இந்த விளக்கம்  நீக்ரோக் களின் அறிவுக் குறைவுக்கு ஒரு காரணமாவது ஞாயமானதே, சொல்லப் போனால், நம்பத் தகுந்ததே. ஆனால் இந்தக் கருத்துக்குப் போதுமான சான்று இல்லை. நீக்ரோக்கள் பூப்பெய் திய பிறகு அவர்களின் வாழ் விலும் சிந்தனையிலும் பாலியல் உணர்வுகள் முதலிடம் பிடித்துக் கொள்வதுதான் அவர்களின் மூளை வளர்ச்சி தடைப்பட்டுப் போவதற்கு, ஏன், கெட்டுப் போவதற்கே கூட காரணம் என்பதில் ஐயத்துக் கிடமில்லை.

படித்துப் பார்த்தீர்களா? நீக் ரோக்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள், சரி யான மூளை வளர்ச்சி இல்லா தவர்கள் என்பதெல்லாம் பிரித் தானியக் கலைக்களஞ்சியம் உதிர்த்த முத்துக்கள். உருப்படி யான எந்த அறிவியல் சான் றேதும் அதனிடம் இல்லை, அவர்களிடம் பாலியல் உணர்வு களே ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களது மூளை வளர்ச்சி கெட்டுப் போயிருக்கும் என்ப தில் எந்த அய்யமும் இல்லை யாம். இது அப்பட்டமான நிறவெறிக் கொழுப்பு இல்லை யா?

ஆனால் 1929இல் வெளி யான பிரித்தா£னியக் கலைக் களஞ்சியத்தின் 14ஆவது பதிப்பு நீக்ரோக்கள் உள்ளார்ந்த வகை யில் அறிவுத் தாழ்வு படைத் தவர்கள் என்ற கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது. ஆனால் படிமலர்ச்சித் தட்டில் அவர்களின் கீழ் நிலை குறித்த கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பதிப் பின் 193ஆவது பக்கத்தில் நீக்ரோக்கள் குறித்த தலைப்பில், கார்-சாண்டர்ஸ் என்னும் பிரித்தானியச் சமூகவியலர் கூறி யுள்ள கருத்தைப் படியுங்கள்:

“அவர்களுக்கு (வெள்ளையர் களுக்கும் கறுப்பர்களுக்கும்) இடையே உள்ளார்ந்த அறிவுத் திறத்தில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வேறுபாடு கள் உளப்பாங்கிலும் சிந்தனைப் போக்கிலுமான வேறுபாடுகளே ஆகும்.”

அதே பக்கத்தில் கார்-சாண்டர்ஸ் மேற்கொண்டு இதற்குரிய தீர்வையும் கூறு கிறார்: “நீக்ரோக்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்பட்டால், அவர்களால் உலோகம், தச்சு, சிற்பம் போன்ற தொழில்களில் நல்ல திறமான கைவினை ஞர்களாக விளங்க முடியும்.”

நீக்ரோக்கள் உடலுழைப்பு செய்யவே தகுதியானவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது பிரித்தானியா.

இதே பதிப்பின் 368ஆம் பக்கத்தில் ‘வேறுபாட்டு உளத் தியல்’ (ஞிவீயீயீமீக்ஷீமீஸீtவீணீறீ றிsஹ்நீலீஷீறீஷீரீஹ்) என்னும் தலைப்பிலான கட் டுரை இவ்வாறு கூறுகிறது:

“நீக்ரோக்கள் மூளைத் திறத் தில் வெள்ளையர்களை விடத் தாழ்ந்திருப்பது பலநேரம் ஒப் பீட்டு ஆய்வுகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டுக்கு நீக்ரோக் களின் அகவயப் பண்புகளோ, புறவயப் பண்பாடுகளோ எந் தளவுக்குக் காரணம் எனக் கூறுவது கடினம்.”

இந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது:

“நீக்ரோக்களிடம் எந் தளவுக்கு வெள்ளைக் குருதிக் கலப்பு ஏற்படுகிறதோ செயற் பாட்டில் அவர்கள் அந்தள வுக்கு வெள்ளையர் களை நெருங்கிச் செல்வார்கள்.”

நீக்ரோக்கள் மூளைத் திறத் தில் வெள்ளையர்களை விடத் தாழ்ந்தவர்களாம், ஆனால் அவர்கள் வெள்ளையர்களுடன் உடலுறவு கொண்டால் அறிவா ளிகளாக வாய்ப்புண்டாம். என்னே பிரித்தானியாவின் அறிவியல் பார்வை! இப்படிப் பட்ட ஆங்கிலந்தான் தமிழ கத்துப் பெரியார்வழிச் சிந்தனை யர்களுக்கு முற்போக்கு மொழி யாகத் தெரிகிறது.

பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தின் இந்த நிறவெறிப் போக்கு 1974 வரை தொடர்ந் தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆண்டு வெளிவந்த பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் 15ஆவது பதிப்பில் நீக்ரோக்கள் என்ற தலைப்பே நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சிறுபான்மையினரும் இனக் குழுவினரும் (விவீஸீஷீக்ஷீவீtவீமீs ணீஸீபீ ணிtலீஸீவீநீ நிக்ஷீஷீuஜீs) என்னும் புதுத் தலைப்பு சேர்க்கப் பட்டது. மக்களிடையே அறிவி லும் பண்பிலும் காணப்படும் வேறுபாடுகளுக்குச் சமூகப் புற நிலைகளே காரணம் எனக் கூறியது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒரே ஓரிடத்தில் மறைமுகமாகச் சாதிய இழிவுக் கருத்து ஒன்றைக் குறிப் பிட்டதற்கே மீனா அந்த அகராதியின் மீதும், தமிழின் மீதும் சினங்கொள்கிறார். மீனா எடுத்துக் காட்டும் இந்த அகராதி 1982 பதிப்பு. ஆனால் உலகம் போற்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் 1974 வரை ‘நீக்ரோக்கள் அறிவில் தாழ்ந்த வர்கள்’ என நேரடியாகவே அவர்களை இழிவுபடுத்தி வந்துள்ளதே, இதற்கு மீனா என்ன சொல்லப் போகிறார்?

பிரித்தானியாவின் நிறவெறிக் கொழுப்புக்கு முடிவே இல்லை. அது நிறவெறிக்கு ஆதரவான அனைத்துப் பிற்போக்கு அமைப்புகளுக்கும் ஆதரவாக இருந்துள்ளது.

கு க்ளஸ் க்ளான் (ரிu ரிறீuஜ் ரிறீணீஸீ - ரிரிரி)  என்பது அமெரிக் காவில் செயல்படும் ஓர் அமைப் பாகும். இதனைத் தமிழில் 'நம்மவர் வட்டம்" எனக் கூற லாம். வெள்ளையர் மேலாண் மை, வெள்ளையினத் தேசிய வாதம், வெள்ளையினத் தூய் மைவாதம், கறுப்பர் எதிர்ப்பு, யூதர் எதிர்ப்பு, கத்தோலிக்க எதிர்ப்பு, பொதுவுடைமை எதிர்ப்பு என அனைத்துப் பிற்போக்குக் கருத்துகளையும் தமது கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் ஒரு தீவிர வலதுசாரி அமைப்பிது.

இதனை அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ். எனலாம். 1950 களில் அமெரிக்காவில் எழுந்த குடியியல் உரிமை இயக்கத்தை (சிவீஸ்வீறீ ஸிவீரீலீts விஷீஸ்மீனீமீஸீt) இந்த அமைப்பு எதிர்த்தது என்பதை வைத்து இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தின் 11ஆவது பதிப்பு இந்த அமைப்பை ஆதரித்தது. வெள்ளைக்காரி கள் மீது அடிக்கடி வன்புணர்ச் சியில் ஈடுபடுவதாக நீக்ரோக்கள் மீது அப்பதிப்பு குற்றஞ்சாட்டி யது.

எனவே நீக்ரோக்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு இப்படி ஓர் அமைப்பு தேவை என ஈவிரக்கமற்றுக் குறிப் பிட்டது. (குறிப்பு: கு க்ளஸ் கான் இன்று அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் தடை செய்யப் பட்டுள்ளது. ஆனாலும் இதன் கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இன்றும் அமெ ரிக்காவில் செயல்பட்டு வரு கின்றன). பிரித்தானியயக் கலைக் களஞ்சியத்தின் இந்த நிலை யுங்கூட 1974 வரை தொ டர்ந்தது.

நீக்ரோக்களின் பாலியல் உணர்வால் அவர்களுக்கு அறிவு வளரவில்லை என பிரித்தானியா கூறியதை மேலே கண்டோம். இங்கு அது ஒரு படி மேலே சென்று அவர் களைக் காம வெறி பிடித்த மனிதர்களைப் போல் சித்தி ரிக்கிறது.

இப்படி பிரித்தானியா பிற் போக்கு அமைப்புகளை மட்டு மல்ல, புதிதாக உருவாகும் பிற்போக்குக் கொள்கைகளை யும் ஆதரித்துள்ளது. யூஜெ னிக்ஸ் என்னும் மனிதவிரோதக் கருத்து மேலை உலகில் உரு வாகி வளர்ந்த போது பிரித் தானியக் கலைக் களஞ்சியம் என்ன கூறியது எனப் பார்ப்போம்.

யூஜெனிக்ஸ் (ணிuரீமீஸீவீநீs) என்பது 20ஆம் நூற்றாண்டுத் தொடக்க வாக்கில் அமெரிக்கா விலும் மேலை நாடு களிலும் புகழடையத் தொடங் கிய ஒரு கருத்தியலாகும். ‘இனமேன் மையியல்’ என்பதே இதன் பொருள்.

இதன்படி குறைபாடுடைய ஓர் இனம் வருங்காலத்தில் ஓங்கி வளராமல் பார்த்துக் கொள்ளப்படும். இந்தக் கொள் கை 1900களில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் அடிப் படையில் 1920களிலும், 1930 களிலும் பெல்ஜியம், ஸ்வீடன், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மனநோயாளிகளை மலடாக்கும் முயற்சி நடை பெற்றது. சொல்லப்போனால் அன்றைய அரசுகள் சில குறிப்பிட்ட ‘மேன்மையான’ இனங்களை மட்டும் தேர்ந் தெடுத்து, அவர்களின் இனப் பெருக்கத்தை மட்டும் அதி விரைவாகப் பெருக்கி நல்ல மரபீனி (ரீமீஸீமீ) கொண்ட இனக்குழுக்களை வளர்த்தெடுக்க முடியும் என நம்பின. இதற்காக இன மேன்மையியல் கொள்கைக்கு ஆதரவளித்தன.

பல பல்கலைக்கழகங்களில் இனமேன்மையியல் துறைகள் இயங்கின. இந்தக் கொள்கை மேலும் வலுப்பெற்று ஒரு மோசமான நிலையை அடைந் தது. ஏழைபாழைகள், மன நோயாளிகள், செவிடர்கள், குருடர்கள், ஓரினச் சேர்க்கை யர்கள், வரைமுறையற்றுப் பாலுறவு கொள்ளும் மகளிர் (றிக்ஷீஷீனீவீsநீuஷீus ஷ்ஷீனீமீஸீ) (பல்கலவி புரியும் பெண்கள்), வாழத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட ரோமா னிகள் (ஜிப்சிகள்), யூதர்கள் போன்ற இனக் குழுவினர்கள் ஆகியோரில் தனியாட்களை அல்லது அவர்களின் குடும் பங்களை அடையாளங்கண்டு அவர்களை மலடர்களாக்க வேண்டும், ஏன், தேவைப் பட்டால் நோகாது சாகடித்து விட வேண்டும் என்னும் கருத்து பின்னர் மெதுமெதுவாகப் பரவத் தொடங்கியது. அப்போ துதான் இந்தக் கருத்தின் ஆபத்தை மனித உரிமையா ளர்கள் உணரத் தொடங்கினர். குறிப்பாக இட்லர் இனத்தூய் மையாக்கல் என்ற பெயரில் யூதர்களையும், முதியோர் களையும் கூட்டங்கூட்டமாகக் கொலை செய்த போது இன மேன்மையாக்கல் கொள் கைக்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதைத் தொடர்ந்து ஐநா நெறிப்படி மேற்கண்ட நடவ டிக்கை இனப்படுகொலை (ரீமீஸீஷீநீவீபீமீ) என்றான பிறகு அக்கொள்கை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த செய்தி என்னவென்றால், இந்த இனமேன்மையாக்கல் கொள்கையை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் ஆதரித்தது என்பதே. மீண்டும் 11ஆம் பதிப்பிற்கே செல்கிறோம். அந்தப் பதிப்பு நாகரிகம் (சிவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ)  என்னும் தலைப் பின் கீழ் இவ்வாறு கூறியது:

“அறிவுத்திறத்தில் கீழ்நிலை யானவர்களை மென்மேலும் வளர விடுவதும் சரி, மாந்தஇன வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிற ஏழை பாழைகளுக்கு, மனநோ யாளிகளுக்கு, குற்றவாளிகளுக்கு உணவளிப்பதும் சரி, இரண்டு மே அறிவுக்குகந்த செயலன்று.”

பிரித்தானியாவின் பார் வையில் யார் யாரெல்லாம் கீழ்நிலையானவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.

'கீழ்நிலையில் உள்ளோர்'  இனப்பெருக்கம் செய்வது பிரித் தானியக் கலைக் களஞ்சியத் திற்குப் பிடிக்கவில்லை. ஏழை களுக்கு உணவளிக்கக் கூடாது என்னும் பிரித்தானியாவின் கொடூரச் சிந்தனை தமிழின் எந்த இலக்கியத்திலும், எந்த அகராதியிலும் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். பெரி யார்வழிச் சிந்தனையாளர்களே இப்போது சொல்லுங்கள், உங்கள் இலக்கணப்படியே கூட எது காட்டுமிராண்டி மொழி? தமிழா? ஆங்கிலமா?

பின்குறிப்பு: இன்று மரபீனி அறிவியலில் மரபீனியியல் வரைபடம் (நிமீஸீமீtவீநீ விணீஜீ), பல்படியாக்கம் (நீறீஷீஸீவீஸீரீ) போன்ற கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி களின் காரணமாக, இந்த இனமேன்மையியல் கொள்கை அமெரிக்கா விலும் மேலை நாடுகளிலும் இன்று வேறு வடிவத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது மரபீனித் துறையில் நிகழ்ந்து வரும் இந்த வளர்ச்சிகளைக் கொண்டு, வளமான மரபீனி யைக் கொண்ட ஒரு செந்தூயத் தலைமுறையை வருங்காலத்தில் உருவாக்க வேண்டுமாம், வாழ்க ஆங்கிலத்தின் முற்போக்கு!

முதலாளியத்திற்கு எதிரான தீப்பொறி க.அருணபாரதி


முதலாளியர்கள் தங்களின் சொர்க்கம் என்று கருதிய வடஅமெரிக்காவில் இப்போது முதலா ளியம் செய்த பாவங்கள் விசாரிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களுக்கான ஒளிக்கீற்று ஒன்று தோன்றியுள்ளது.

உலகமய நிதி மூலதன ஆதிக்கம், உலகெங்கும் உள்ள நாடுகளில் போலியான ‘வளர்ச்சி’யைக் கட்டமைத்து, மண்ணின் மக்களை வேலை யின்மையில் வாட்டியது. சிறு தொழில்களை நசுக்கிவிட்டுப் பெருமுதலாளிகளை வளர்த்தது. உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய ஞாயமான பணம், ‘இலாபம்’ என்ற பெயரில், விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனிநபர் களாலும், தனியார் நிறுவனங்களாலும் பிடுங்கப் பட்டது.

உலகமய முதலாளிகளின் இந்த சூறையாட லுக்கு ஆதரவாக வடஅமெரிக்கா தொடங்கி பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றுடன் பொருளியல், இராணுவக் கூட்டிணைவை மேற்கொண்டிருந்த இதர நாடுகளும், அவற்றின் அதிகார வர்க்கங்களும் துணை நின்றன.

முதலாளிகளுக்கு எப்பொழுதெல்லாம் பணத் தேவை ஏற்பட்டதோ, அப்பொழுதெல்லாம் இவ்வரசுகள் மக்கள் தலையில் வரிகளைச் சுமத்தி உலகமய முதலாளிகளுக்கு முட்டுக் கொடுத்தன.

உலகமயப் பன்னாட்டு நிறுவனங்கள் மீதும், அவற்றின் கொள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் அரசுகளின் மீதும் உழைக்கும் மக்களுக்கு இருந்த வெறுப்புதான், இன்று முதலாளியத்தின் கொ டுங்கோன்மைக்கு எதிரான போர்க்குரலாக உல கெங்கும் ஒலிக்கிறது. இதனை ஒருங்கிணைத்து சாத்தியப்படுத்திக் காட்டியது தான், ‘வால்ஸ்ட் ரீட்டைக் கைப்பற்றும் இயக்கம்’(ளிநீநீuஜீஹ் கீணீறீறீ stக்ஷீமீமீt).

அமெரிக்கப் பன்னாட்டு முதலாளிய நிறுவனத் தலைமையகங்களும், பங்குச்சந்தைத் தலைமை யகமும் உள்ள சாலை வால்ஸ்ட்ரீட். இந்தச் சாலையைக் கைப்பற்றுவோம் -முதலாளியத்தை வீழ்த்துவோம் என்ற முழக்கத்துடன் உழைக்கும் மக்கள் அச்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வை சூறையாடிய முதலாளியத்திற்கு எதிராக சீறிக் கிளம்பியுள்ள இந்நிகழ்வே அமெரிக்க மண்ணில் கிளம்பிய அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று! உலகமய முதலாளிகளின் தாய் மண்ணான வட அமெரிக்க மண்ணில் தான் இந்த முதலாளிய எதிர்ப்பியக்கம் முளைத்துள்ளது..

முதலாளிய ஊடகங்களாலும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றின் வழியாகவும் தொடர்ந்து மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள  முதலாளியக் கருத்தியல் களாலும் கவ்வபட்ட உழைக்கும் மக்கள் தற் போது இதிலிருந்து விடுதலை பெற வழி தேட முனைகின்றனர்.

உலகமய பெருநிறுவன முதலாளிய ஆட்சி, உலகெங்கும் விரிவடைய விரிவடைய உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அது ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. ஒருபுறம் வேலை யின்மை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விரல்விட்டு எண்ணக்கூடிய புதிய பணக்காரர் களை உலகமயம் உற்பத்தி செய்து கொண் டிருந்தது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, 20 விழுக்காட்டு அமெரிக்கர்கள், அமெரிக்க வருமா னத்தில் 49.4 விழுக்காட்டைப் பெறுவதாகவும்,  வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 15 விழுக்காட்டு மக்கள் வெறும் 3.4 விழுக்காடு வருமானத்தையே  பெறுவதாகவும் அப்போது எடுக்கப்பட்ட அரசுக் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

உலகமயம் ஏற்படுத்தியிருந்த இப்பின்விளைவு களுக்கு எதிராகத் தான், ‘வால்ஸ்ட் டிரீட்டைக் கைப்பற்றும் இயக்கம்’ அமெரிக்காவில் தொடங் கப்பட்டது. "வேலையிழந்த அமெரிக்கர்களே, பங்குச் சந்தைச் சூதாடிகளும், உலகமயப் பன் னாட்டு நிறுவனங்களும் மிகுந்திருக்கும் நியூயார்க் நகரின் வால்ஸ்ட்ரீட் தெருவை முற்றுகை யிடுவோம் வாருங்கள்" என 'ஏட்பஸ்டர்ஸ்' எனப்படும் முதலாளிய நுகர்வியத்திற்கு எதிரான ஓர் ஏடு கடந்த சூலை மாதத்திலிருந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.

‘வால்ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம்’ என்ற முழக்கத் தோடு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு, ஏராளமான உறுப்பினர்கள் அதில் சேர்ந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் 17 அன்று அலையலையாக அமெரிக்க மக்கள் வால் ஸ்ட்ரீட் தெருவில் குவியத் தொடங்கினர். அழைப்பு விடுத்த பத்திரிக்கை நிர்வாகி களே வியக்கும் வகையில், மக்கள் தற்காலிகக் குடியிருப்பு களுடன் வால்ஸ்ட்டிரீட்டில் குவிந்தனர். பணசார்பற்ற அரசியல் முதன்மை பெறும் ஒரு புதிய அமெரிக்காவிற்காக நாங்கள் கூடுகிறோம் என்று அவ்வேடு இதனைக் குறிப்பிட்டது.

மக்கள் குவியவே, மேலும் பல்வேறு அமைப்பினர், பன் னாட்டு நிறுவனங்களால் வேலையிலிருந்து விரட்டப் பட்டவர்கள், வீடுகளை இழந்த வர்கள், மாணவர்கள், ஊழியர் சங்கத்தினர் எனப் பல தரப் பினரும் ஒன்று கூடினர்.

உலகமயம் தோற்றுவித் திருந்த பொருளியல் சமநிலை யற்றத் தன்மையை விளக்கும் வண்ணம், ‘நாங்கள் தான் பெரும்பான்மையானவர்கள்’ (கீமீ ணீக்ஷீமீ tலீமீ 99%) என்ற பதாகையை அமெரிக்க உழைக் கும் மக்கள் கையிலேந்தி வால் ஸ்ட்டீரிட் தெருக்களில் நின் றனர்.

நமது ஊர்களில் செய்வதைப் போல் சாலை மறியல் போராட் டங்களை நடத்துவது அமெ ரிக்க மண்ணில் அவ்வளவு எளி தான காரியமல்ல. ஆனாலும், அம்மக்கள் அரசின் அடக்கு முறைகள் எவற்றுக்கும் அஞ்சா மல் தெருக்களை அடைத்துக் கொண்டு அமர்ந்தனர். மறி யலில் அமர்ந்த 80 பேரை காவல்துறை கைது செய்தது. போராடும் மக்களுக்கு ஆதர வாக, எழுத்தாளர்களும், திரைக் கலைஞர்களும் கை கோத்து நின்றனர். முதலாளியத்திற்கு எதிரான அமெரிக்க மக்களின் இத்தொடர் போராட்டத்தை பெரும்பான்மையான அமெ ரிக்க மக்கள் ஆதரிக்கின்றனர் என ஊடகங்களில் வந்த கருத்துக் கணிப்புகள் கூறின.

போராட்டக்காரர்கள் யாரும் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. மாறாக, அங் கேயே தற்காலிகக் குடியிருப்பு களையும், உணவுக்கான ஏற்பாடு களையும் செய்து கொண்டு  போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அக்டோ பர் முதல் வாரத்தில், புரூக்ளின் பாலம் நோக்கிய போராட்டக் காரர்களின் பேரணியைத் தொ டர்ந்து 700 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் நடந்து வந்த இந்த நிகழ்வுகளைத் தொ டர்ந்து, அக்டோபர் இரண் டாம் வாரத்தில், பிரிட்டன் நாட்டுத் தலைநகரான இலண் டனில் உள்ள இலண்டன் பங்குச்சந்தை முற்றுகையிடப் பட்டது. இலண்டனைத் தொ டர்ந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம், ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், டாய் பேய், பாரீஸ், மேட்ரீட், பெர் லின் என உலகெங்கும் வால் ஸ்ட்டீரீட்டைக் கைப்பற்றும் இயக்கத்தின் வீச்சு தீயாகப் பரவியது.

அக்டோபர் 29 அன்று பிரான்ஸ் நாட்டில் நடை பெறும் பணக்கார நாடுகளின் ஜி-20 கூட்டமைப்பின் கூட்டத் தைத் தொடர்ந்து போராட் டங்கள் மேலும் தீவிரம் பெற்று வருகின்றன. வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் இயக்கத்தின் இணையதளத்தில், இதுவரை 82 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட நகரங்களில் இவ்வியக்கம் வளர்ந் துள்ளதாகவும், போராட் டங்கள் கூர்மையடைந்து வருவ தாகவும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடு களில் தற்போது பெருகி வரும் வேலையின்மையும், முற்றி வரும் பொருளியல் நெருக்கடி யும் மேலும் மேலும் தீவிரப் பட்டு வரும் சூழ்நிலையில், அவர்க ளுடன் பொருளியல் கூட்டு வைத்திருக்கும் இந்தியா செய்வத றியாது நிற்கிறது. “உலக மயத்தின் (பாதகமான)பின் விளைவுகளைத் தான் நாம் இன்று சந்திக்கிறோம்” என்று வெளிப்படை யாகவே கூறி னார், இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்.  

முதலாளிய நிறுவனங்களின் சூதாட்டக் களமான பங்குச் சந்தைகளை உலகெங்குமுள்ள உழைக்கும் மக்கள் அலை யலையாக சென்று முற்றுகை யிட்ட இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். உல கெங்கும் பரந்து விரிந்துள்ள இந்த இயக்கம், வேலையின்மை, பெருநிறுவன ஆதிக்கம் ஆகிய முதலாளிய சந்தைப் பொருளி யலின் பின் விளைவு களை எதிர்த்து மட்டுமே கட்டமைக் கப்பட்டிருக்கிறது.

ஆயினும், இது ஒட்டுமொத்த சந்தைப் பொருளியலுக்கு எதிரானதாகவும், முதலாளியப் பொருளியலுக்கு மாற்றாக அந்தந்த நாட்டின் தன்மைக் கேற்ப மார்க்சியப் பொருளி யலை முன் வைப்பதாகவும் வளர்ச்சியடைந்தால் தான் உழைக்கும் மக்களின் இப் போர்க் குணமிக்கப் போராட் டங்கள் இறுதி வெற்றி அடையும்..

கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது கி.வெங்கட்ராமன்


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீச்சோடு நடைபெற்று வருகிறது.  நெல்லை மாவட்டம் இடிந்தகரை என்ற சின்னஞ் சிறு கிராமம், உலகம் கவனிக்கும் முக்கியமான மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கூடங் குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் இன்று தமிழகம் தழுவியதாக மாறிவருகிறது. இது இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு வகை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்கொள்வதற்காக ஒரு பக்கம் வாக்குறுதிகளையும், குழப்பமான வாதங்களையும் முன்வைத்து, மறுபுறம் தங்கள் கையாட்களின் மூலமாகவும் உளவு நிறுவனங்களின் மூலமாகவும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முயலுகிறது இந்திய அரசு. கூடங்குளம் அணுஉலை மிகவும் உயர்தரத் தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ளது, பாது காப்பானது என்று இந்தியப் பிரதமர் முதல் கூடங்குளம் அணுஉலை அதிகாரிகள் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபுறம் இந்த அணு உலை தமிழ கத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்த்து தொழில் வளர்ச்சிக்குத் துணை செய்யும் என்று கூறுகிறார்கள். கூடங்குளம் பகுதி இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் என்ற வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குகிறார்கள். இருக்கிற மின்சாரங்களிலேயே அணு மின்சா ரம்தான் சிக்கனமானது, தூய்மையானது, சுற்றுச் சூழலைக் கெடுக்காதது என்றும் கூறுகிறார்கள். இவற்றை எதிர்கொண்டு இந்திய ஏகாதிபத் தியத்தின் சதித்திட்டத்தை முறியடிப்பது தமிழகத்திலுள்ள மக்கள் இயக்கங்களின் முன் னுள்ள பணி ஆகும். அவர்களுடைய வாதங் களையும் வாக்குறுதிகளின் பொய்மைகளையும் எதிர்கொண்டு அம்பலப்படுத்த வேண்டியது முதன்மையான தேவையாக இருக்கிறது. இக்கட் டுரை அந்நோக்கத்திலேயே வருகிறது.

1988 நவம்பரில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத் தப்பட்ட உடனேயே தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. இந்திய அரசும் சோவியத் ஒன்றிய அரசும் இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தியது.

அன்று இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு கிளையாக இயங்கிய போது, எம்.சி.பி.ஐ. தமிழ்நாடு மாநில அமைப்புக்குழு 1988 நவம்பர் 26, 27 ஆகிய இருநாட்கள் சிதம்பரத்தில் கூடிய போது இயற்றியத் தீர்மானம் இதனை வலியுறுத்தியது.

பொதுவாக அணு உலைகள் அது எந்த வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1.சாதா ரண உற்பத்திக் காலங்களில் இயல்பாக உற்பத்தி நடக்கிறபோது, 2. உற்பத்தி நடந்து கொண் டிருக்கும்போது ஏற்படுகிற நிகழ்வுகளின் போது (மிஸீநீவீபீமீஸீts), 3. எதிர்பாராமல் நடக்கிற விபத்து களின் போது (ணீநீநீவீபீமீஸீts), 4. உற்பத்தி முடிந்து அணு உலையின் ஆயுள் காலம் முடிந்து அதை மூடி வைக்கிற போது, 5. அணு உலையிலிருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளைப் பாது காக்கிற போது என்று எல்லா நிலைகளிலும் கதிர்வீச்சு ஆபத்து வெவ்வேறு அளவுகளில் இருக்கவே செய்கின்றது.

அணு உலை இயங்கும்போது அதிலிருந்து வெப்ப ஆற்றல் வெளிப்படுவதோடு கதிர் இயக்கத் தனிமங்களும் வெளிப் பட்டுக் கொண்டே இருக் கின்றன. ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான், ரேடான் ஆகியவற்றின் கதிரி யக்க ஐசோடோப்புகள் வெளிப் படுகின்றன. அது மட்டுமின்றி அயோடின் 131, சீசியம் 137 ஆகிய கதிரியக்க ஐசோ டோப்புகளும் வெளிப்படு கின்றன. இவை ஏராளமான கதிர்வீச்சைப் பரப்புகின்றன.

இயல்பாக உடல் தாங்கக் கூடிய கதிர்வீச்சு அளவை விட ஒரு இலட்சம் கோடி மடங்கு கதிர்வீச்சு இவற்றின் மூலம் வெளிப்படுகிறது, இக்கதிர்வீச்சு உடலைத் தாக்கினால் எலும்புப் புற்று நோய், இரத்தப் புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற புற்று நோய்கள் வரும்.  கருச்சிதைவு ஏற்படும். தலை முறை தலைமுறையாக உடல் ஊனத்தோடு குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். கதிர் வீச்சில் பாதிக்கப்பட்ட காற்றைச் சுவாசிக்கும் எல்லா உயிரிகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும். அணு உலை அமைந்திருக்கும் பகுதியில் மட்டுமின்றி, குறைந்தது 170கிமீ சுற்றளவில்  உள்ள புல்லி லிருந்து நெல்லிலிருந்து அனைத்து வகை தாவரங் களிலும் இந்த அணுக்கதிர்வீச்சு படிந்துவிடும். புல்லைத் தின்கிற மாடும் தாவரங்களை மேய்கின்ற ஆடும் அவற்றைப் பயன்ப டுத்துகிற மனிதர்களும் தொ டர்ச்சியாகப் பாதிப்புக்கு உள் ளாவார்கள். அடுத்தடுத்த தலை முறைக்கும் இந்தக் கதிரி யக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.

நிகழ்வுகள் நடைபெறுவ தற்கான வாய்ப்பு இந்த இரஷ்ய அணு உலையில் அதிகமாகவே இருக்கிறது. கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலை விவிஇஆர்1000 (க்ஷி.க்ஷி.ணி.ஸி 1000) என்ற ஒரு வகை அணு உலை யாகும். இதன் வாழ்நாள் 35 ஆண்டுகள். 35ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணுஉலையை இயக்கக்கூடாது என்று அதன் தொழில்நுட்பமே கூறுகிறது. அத்தோடு இரண்டாண்டு களுக்குப் பிறகு இந்த அணு உலையில் சிக்கல்கள் (றிக்ஷீஷீதீறீமீனீs) நிகழ்வுகள் (மிஸீநீவீபீமீஸீts) தொ டங்கும் என்று அதை வடிவ மைத்த அறிவியலாளர்களே குறித்திருக்கிறார்கள்.

இப்போது 2011 சூலையில் இரஷ்ய பிரதமர் மெத்வதே விடம் இரஷ்ய சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் அணு உலை களை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் 31 குறைபாடுகள் வி.வி.இ.ஆர். வகையில் இருப்ப தாகச் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது.  மிகை யான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதார ணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் இற்று ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அது போல் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. இதுபோல் 31 குறைபாடுகள் விவிஇஆர் அணுஉலைபற்றிக் குறிக்கப்பட்டுள்ளன.

இரஷ்ய வடிவமைப்பு வி.வி. இ.ஆர். அணுஉலை மட்டு மின்றி எந்த வகை அணு உலையும் தனது நாடடில் வேண்டாம் என்று செர்மன் நாடு முடிவு செய்துவிட்டது. வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் இருக்கிற எல்லா அணு உலை களையும் படிப்படியாக மூடி விடுவது என்று அந்நாடு முடிவு செய்திருக்கிறது.

எந்த வகை அணு உலையும் தங்கள் நாட்டில் கூடாதென்று இத்தாலி முடிவு செய்து விட்டது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளும்  அணு உலை கூடாது என்று முடிவு செய்துவிட்டன. இவை யெல்லாம் அணு உலைகள் பாதுகாப்பானவை அல்ல என்பதற்கும் குறிப்பாக கூடங் குளத்தில் நிறுவப்படவுள்ள விவிஇஆர் அணு உலை பாது காப்பானது அல்ல என்பதற்கும் சான்றாகும்.

அணு உலைக்குள் செலுத் தப்பட்டு வெப்பத்தால் கொ திக்கும் கடல் நீர் மீண்டும் கடலுக்குள் விடப்பட இருக் கிறது.  சராசரியாக 1300 டிகிரி ஃபாரன் கீட்டுக்கு மேல் அதனு டைய வெப்பம் இருக்கும். அவ்வளவு கொதிக்கும் நீர் கடலில் விடப்படும்போது கூடங்குளத்தைச் சுற்றி மட்டு மல்ல திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மாவட் டம் வரையிலும் உள்ள கடற் பரப்பில் மீன்வளம் கடுமை யாகப் பாதிக்கப்படும்.  கடல் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அங்குள்ள கடல் உயிரிகள் மீன் வகைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து விடும். மீனவர்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியைச் சந்திக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப் பே இல்லாத பகுதி என்று இந்திய அணுசக்திக் கழகத் தினுடைய தலைவரிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் வரை துண்டு போட்டுத் தாண்டாத குறையாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். உண் மை நிலையோ அதற்கு மாறாக உள்ளது. இதே கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. 2006 மார்ச் 10 ஆம் நாள் கூடங் குளம் அருகிலுள்ள அஞ்சு கிராமம், அழகப்பபுரம், சாமித் தோப்பு ஆகியவற்றில் இலே சான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய் துள்ளன. இப்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்தி ருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத் துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாத இடம் என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இந்திய அணு உலைகளில் இதுவரை நிறுவப்பட்டுள்ள எந்த அணு உலையுமே முழு பாதுகாப்புடன் இயங்கியதாக வரலாறு இல்லை.

கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக் குறைவின் காரண மாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் மீண் டும் மீண்டும் கூறி வருகிறார். எல்லா ஏடுகளிலும் அவருடைய நேர்காணல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் அவர் எழுப்பி வருகி றார். அதற்கு அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ உருப்படியான பதில் எதுவும் கிடையாது

அணுமின்சாரம் சிக்கன மானது என்று ஆட்சியாளர்கள் சொல்வதும் உண்மையல்ல. இந்திய அரசே வெளியிட்டுள்ள கணக்குகளைத் தொகுத்துப் பார்த்தால் அணுமின்சாரத் துக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் 200 விழுக்காடு ஆகும். அதாவது அணு மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் 2000 ரூபாய் மானியமாக அரசு அளிக்கிறது. இதன் மூலமாக ஒரு  நிறுவனம் உற்பத்தியில் இறங்கிவிட்டாலே இரண்டு மடங்கு இலாபத்தைப் பெற முடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரிலையன்ஸ் அம் பானியும் டாட்டாவும் அணு உலை அமைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன் வந்திருக்கிறார்கள்.

அணு உலை மூடப்பட்ட பிறகு அல்லது அதனுடைய ஆயுள்காலம் முடிந்து நிறுத்தப் பட்டபிறகு அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப்  பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாது காப் பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் கிடையாது என வே பல நாட்டு மக்கள் தங்கள் பகுதியில் அணுக் கழிவுகளைப் புதைக்கக் கூடாது என்று கிளர்ச்சி செய்கிறார்கள்.

யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தை அணு எரிபொ ருளாகப் பயன்படுத்தினால் அது பாதுகாப்பானது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.  (எ.கா. புதிய தலைமுறை வார இதழ் 20.10.2011) தோரியம் என்ற தனிமமும் கதிரியக்கத் தனி மம்தான். அதிலிருந்தும் கதிர் வீச்சு அபாயம் இருக்கிறது.

தோரியத்தில் இயங்கும் அணு உலைகளில் கனநீருக்குப் பதிலாக நீர்ம சோடியம் குளிர் விக்கும் திரவமாகப் பயன் படுத்தப்படுகிறது.  அதிவேக ஈனுலையில் (திணீst ஙிணீக்ஷீ ஸிமீணீநீtஷீக்ஷீ) நீர்ம சோடியமே பயன்படுகிறது.  சோடியமானது காற்று பட்டா லே வெடிக்கக் கூடியது. கன நீரை விட இது பாதுகாப்பு குறைவானது.  இந்த அதிவேக ஈனுலைகளின் மேற்கூரை பல வீனமானது. சோடியம் வெடிப் பை தாங்க இயலாதது.

1995இல் சப்பானின் மொன்சு ஈனுலையில் சோடியம் கசிவு தொடர்ந்து ஏற்பட்டது.  ஆண்டுக்கணக்கில் அதனைச் சரிசெய்ய முயற்சி நடந்தது. அது தோல்வியில் முடிந்ததால் மூடப் பட்டது. பிரான்சு, பிரிட்டன் தோரியம் அணு உலையிலும் இவ்வாறான விபத்துகள் நடந்தன.

உண்மையில் தமிழ்நாட்டில் மின்வெட்டு வரக்கூடாது தொ ழில் நிறுவனங்களுக்கு தடை யற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால்  தமிழகத்து மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே உரியதாக்கிவிட்டால் போதும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் மின்சார வாரியம் விலை கொடுத்துத்தான் வாங்கு கிறது. விலை கொடுத்து தமிழ் நாட்டு மின்சார வாரியம் வாங்குவதற்குக் கூட இந்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மின் சாரம் முழுமையாகக் கிடைப்ப தில்லை.

தமிழகத்திற்குக் காவிரி நீரை அடாவடியாக மறுக்கும் கர் நாடகத்திற்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போய்க் கொண்டி ருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. அதே போல் பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு நெய் வேலி மின்சாரம் நாள்தோறும் 6 கோடி யூனிட் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு தமிழகத்துக்கு எதிரான சட்ட விரோதமான நீர் முற்றுகை யிடும் மாநிலங்களுக்கு இந்திய அரசின் நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து நாள் தோ றும் 26 கோடி யூனிட் மின் சாரம் போய்க் கொண்டி ருக்கிறது.

தமிழகத்துக்கு உள்ள மின் சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் தான். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே திருப்பிவிடப்பட்டால் தமிழ கத்தில் மின் பற்றாக்குறை இருக் காது. மின்சார உபரி மாநில மாகத்  தமிழ்நாடு திக ழும். இதைச் செய்வதற்கு இந்திய அரசு என்றைக்கும் முன்வரு வதில்லை. மன்மோகன் சிங் என்றைக்கும் இதுபற்றிச் சிந்தித் ததில்லை. கூடங்குளம் அணு உலையை தமிழர்கள் மீது திணிப்பதற்காக இங்குள்ள மின்வெட்டைக் காரணமாகக் காட்டிப் பசப்புகிறார்.

கடலலை மின்சாரம், காற் றாலை மின்சாரம், கழிவி லிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் ஆகியவற்றில் இந்திய அரசும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும். எளிமை யான உறுதியான இவ்வாறான மாற்று வழிகள்  இருக்க அணு உலை என்பது கூடவே கூடாது. அழிவை ஏற்படுத்தும் அணு மின்சாரத்தை ஒரு மின் உற்பத் திக்கான வழியாக ஏற்கவே கூடாது.

இந்திய அரசு தமிழக அமைச்சரவையின் தீர்மானத் தையோ தமிழக மக்களின் கருத்தையோ ஒரு பொருட் டாகவே கருதவில்லை. எப்ப டியும் கூடங்குளம் அணுஉலை யை இயக்குவது என்று பிடி வாதமாக இருக்கிறது. கண் துடைப்பாக தானடித்த மூப் பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்து மக்களிடம் பேசுவது என்று அறிவித்திருக்கிறது. போராடும் மக்களிடமும் வல் லுநர் குழுவின் பட்டியல் பற்றிக் கேட்கப்படவில்லை. தமிழக அரசிடமிருந்தும் பட்டியல் பெறப்படவில்லை. இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக அக் குழுவை அமைத்து மக்களை எப்படியாவது ஏற்கச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது.

இன்னொரு புறம் இந்திய அரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைக் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களிடம் பேச வைப்பது என்ற திட்டத்தில் இந்திய அரசு இறங்கியி ருக்கிறது. அப்துல்கலாம் அணு வெடிப்பை அணு குண்டை ஆதரிக்கிற அணுவியலாளர். அணு அறிவியலாளர். இருந்த போதிலும் நல்ல தமிழ் உணர் வாளர். இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை உள் ளவர் என்கிற வகையில் தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்கள். ஆனால் கூடங் குளம் அணு உலைக்கு ஆதர வாகப் பரப்புரையில் அவர் இறங்கினால் அது அவருக்கு மதிப்புக் குறைவைத்தான் உண் டாக்கும்.

அவரை வைத்துத் தமிழ் உணர்வாளர்களை, அவர்மீது பற்று வைத்துள்ள இளைஞர் களை, ஒரு பகுதி இஸ்லாமியர் களை இப்போராட்டக் கருத்தி லிருந்தும் களத்திலிருந்தும் அப் புறப்படுத்திவிடலாம் என்று கேவலமான பிளவு உத்தியை இந்திய அரசு வகுத்துள்ளது. அதற்கு யாரும் இரையாகிவிடக் கூடாது. முனைவர் அப்துல் கலாமும்  அதற்குத் துணை போகக் கூடாது.

அது மட்டுமின்றி சாதியை வைத்தும் மதத்தைக் காட்டியும் பணத்தாசைக் காட்டியும் போ ராடும் மக்களைப் பிளவு படுத்துவதற்கு அனைத்து வகை யிலும் இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது அறிவியலுக்கு எதி ரானது. வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்தைப் பரப்புவதற்கு இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கிடைத்திருக்கிற இன்னொரு வகை கையாட்கள் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அக்கட்சியின் தமிழ்நாடு அமைப்பு கூடங்குளம் அணு உலைக்கு வரிந்து கட்டிக் கொண்டு பரிந்து பேசுகிறது. ஆனால் அதே கட்சியின் அனைத்திந்தியச் செயலாளர் பிரகாஷ் காரத் முயற்சியில் ஜெய்த்தாப்பூர் அணு உலைக்கு எதிராக மராட்டியத்தில் மட்டு மின்றி இந்தியா முழுவதும் போராட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. மராட்டிய மாநிலம் ஜெய்த் தாப்பூரில் அமையவிருந்த அணு உலைக்கெதிரான போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முனைப்பாகப் பங்கேற்றது.  இப்போது அனைத்திந்திய அளவில் அப் போராட்டத்தை விரிவுபடுத் துவதற்கும் அக்கட்சி இறங் கியுள்ளது.

இரஷ்ய அணு உலை முத லில் கேரளாவில் அமைய விருந்தது.  கேரளத்திலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் இணைந்து எதிர்த் ததால் கேரளாவில் அமைய விருந்த இரஷ்ய அணு உலை கூடங்குளத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அனைத்திந்தியத் தலைமை யும் மராட்டிய மாநிலத் தலை மையும் கேரளத் தலைமையும் அணு உலைக்கு எதிராக இருக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு குழு தமிழின விரோதப் பாதையில் இன்னொரு நடவடிக்கையாக கூடங்குளம் அணு உலையை ஆதரித்துப் பரப்புரை செய் கிறது. அண்மையில் கூடங் குளம் அணுஉலை நிறுவனத் தலைவர் இராமமூர்த்தியை வைத்து கருத்து உருவாக்கும் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நடத்தியது. அக் கட்சியின் மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராசன், அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராசன் ஆகியோர் அதில் கலந்து கொண்டு எப்படியும் கூடங் குளம் அணு உலையை நிறுவி யே தீருவது என்று வலிந்து  பேசியிருக்கிறர்கள்.

இந்திய அரசு பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து அப்போ ராட்டத்தை இடிந்தகரையில் மையம் கொண்டு நடத்திக் கொண்டிருக்கிற அறிவாளர் களையும் போராட்டத் தலைவர்களையும் மக்களிடம் இருந்து பிரிப்பதற்குப் பல அவதூறு களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இது இரஷ்யா விற்கு எதிரான அமெரிக்கச் சதி என்று சொல்வதற்கு உளவுத் துறை யோடு தொடர்புடைய பலரையும் ஊடகத்தின் வாயிலாகக் களமிறக்கியிருக் கிறது முதல் நபர் அமெரிக்கக் கையாளான சுப்பிரமணியம் சுவாமி “இது வெளிநாட்டுச் சதி“ என்று தொலைக் காட்சியில் பேட்டி அளிக் கிறார். எந்த வெளிநாட்டுச் சதி என்று வெளிப்படையாக அவரால் சொல்ல முடிய வில்லை. காரணம் அவர் சொல்ல விரும்புகிற வெளிநாடு அமெரிக்கா. அந்த அமெரிக்கா வின் முதல் நபர் கையாளாகவே தான் இருக்கிறபோது அதைச் சொல்ல முடியாமல் விழிக் கிறார். இந்த அவதூறு களின் அடிப்படை நோக்கம் மக் களைத் தலைமையற்றவர் களாக மாற்றுவது, அதன் மூலம் திசை தெரியாமல் அவர்களைச் சிதறடிப்பது என்பதுதான்.

உலக அணு ஆயுத வல்லரசு களின் அணிவகுப்பில் இந்தியா வும் சேர்ந்து கொள்ள விரும்பு கிறது. அணு ஆயுத வல்லரசாக மாறும் கனவு இந்தியாவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி ஆட்சிக் கலத்தில் 1974ஆம் ஆண்டு பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை நடத்தப் பட்டது. அந்த பொக்ரான் 1 அணு வெடிப்பு சோதனையைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப் புக்கு இந்திய அரசு ஆளானது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதர வோடு அணு ஆயுதக் குவிப்பில் இறங்குவதற்கு இந்திய அரசு முனைந்தது. அந்தச் சூழலில் தான் கூடங்குளம் பேச்சு வார்த்தை தொடங்கியது.

அணு மின்சாரத்திற்கான உலை என்பது அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியம் போன்ற கதிரியக்கக் கழிவுகளில் சிலவற்றைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். இது உலகறிந்த கமுக்கம்.  அணு மின்சாரம் என்ற பெயரில் இரஷ்யாவிலிருந்து யுரேனி யத்தை இறக்குமதி செய்து அணு மின்சாரத்தையும் உற் பத்தி செய்துவிட்டு அதிலிருந்து கிடைக்கும் புளுட்டோனியத் தை வைத்து அணுகுண்டு தயாரிக்கலாம் என்ற ஒரு திட்டத்தில்தான் சோவியத் ஒன்றியத்தை இந்தியா அணு கியது.

ஆனால் சோவியத் ஒன்றி யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அரசியலில் ஏற்பட்டிருக்கிற மாறுதலுக்கேற்ப இந்திய அரசு அமெரிக்க வல்லரசின் கூட்ட ணியில் இணைந்திருக்கிறது. இன்று அமெரிக்க வல்லரசின் அணு ஆயுதக் கூட்டாளிகளில் ஒருவராக இந்தியா இணைந் திருக்கிறது.   இங்கு அணு உலை ஏற்படுத்துவது என்பது இந் தியா உலக ஏகாதிபத்திய வல் லரசுகளில் ஒன்றாக வளர் வதற்கு ஒரு முக்கிய கண்ணியாக அமைகிறது.

இதுவரையிலும் இந்தியா வில் அமைந்துள்ள அணு மின்சார உலைகள் 500 மெகா வாட்டைத் தாண்டி உற்பத்தித் திறன் உள்ளவை அல்ல. முதல் முறையாக 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் கூடங்குளத்தில்தான் நிறுவப்படுகின்றன. இது தொ டர்பான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டு காலம் தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தது. இதை நம்பிக் கையாக வைத்துத்தான் மேற்கு வங்காளத்தில் அரிப்பூரிலும் மராட்டியத்தின் ஜெய்த்தாப் பூரிலும் இன்னும் ஒரிசாவிலும் ஆந்திராவிலும் வேறு சில மாநிலங்களிலும அணு உலை களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தொடக்க நிலையிலேயே ஜெய்தாப்பூர் அணு உலைத் திட்டம் மக்கள் எதிர்ப்பைச் சந்தித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அரிப் புரில் அணு உலை ஏற்படுத் துவதற்கு அம்மாநில முதல மைச்சர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு காட்டியதால் அத் திட்டம் கைவிடப்பட்டது.

எனவே கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் தொடங்கு வதென்பது தொடர்ச்சியான இந்திய அரசின் அணு வல்லரசு முயற்சியில்  முக்கியமான ஒன் றாக அமைந்திருக்கிறது.

இந்த அணு உலை ஒப்பந் தத்தின் மூலமாக அணு உலை தயாரிக்கிற பன்னாட்டு நிறுவ னங்களிடமிருந்து பல இலட்சம் கோடி கையூட்டுப் இந்திய அரசியல் தலைவர்களுக்கம் அதிகார வர்க்கத்தினருக்கும் உயர் மட்ட அறிவியலாளர் களுக்கும் கிடைப் பதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்தப் பல இலட்சம் கோடி கையூட்டுப் பணம் மிகப் பெரிய கவர்ச்சி யாக ஆட்சியாளர்களை ஈர்க் கிறது.  இவை எல்லாவற்றிற்கு மான திறவு கோலாக இன்று கூடங்குளம் அணு உலை அமைந்துள்ளது.  எனவே தான் கூடங்குளம் அணு உலையைத் திறந்தே தீருவது என்ற முயற்சி யில் இந்திய அரசு இறங்கி யுள்ளது.

அதற்காக முயலைப் போல், எலியைப் போல் சோதனைச் சாலைக்கு உரிய பிராணிகளாக ஒட்டுமொத்தத் தமிழினத்தை மாற்றியுள்ளது.

எனவே இடிந்தகரை தொ டங்கி தமிழகம் முழுவதும் பரவி வரும் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்திய வல்லாட்சியை எதிர்த்த தமிழி னத்தின் தொடர் போராட் டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது.

சிங்களப் பேரினவாத அர சோடு இணைந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இனப் படுகொலை செய்தது இந்திய ஆரிய ஏகாதிபத்தியம் ஆகும்.  தமிழ்நாட்டு மீனவர்கள் 550 பேர் சிங்களத் துப்பாக்கிக்கு பலியானது இந்திய வல்லாட் சியின் துணையோடுதான். அது போதாது என்று நான்கு சுறா மீன்களைப் பிடித்தார்கள் என்ப தற்காக கடலோரக் காவல்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் கை விலங்கிட்டு அடித்து நொறுக்கி இழிவு படுத்தியிருக்கிறது.  நாள் தோறும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினராலும் சிங்கள அரசின் கைக்கூலி களாலும் அன்றாடம் தாக்கப் படுவதும் இழிவுபடுத்தப்படு வதும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப் புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு இந்திய வல்லரசு துணை செய் கிறது.  உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கி யிருக்கிற மலையாள அரசுக்குத் துணை செய்கிறது இந்திய வல்லரசு. கசிந்து வரும் பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திரா விற்குத் துணை போகிறது இந்திய வல்லரசு. வேலை வாய்ப்பைப் பெருக்குவதாகச் சொல்லித் தமிழகத்தை வெளி யாரின் வேட்டைக்காடாக மாற்றியிருப்பதுதான் இந்திய வல்லரசு.

இந்திய வல்லரசின் தமி ழினப் பகைப் போக்கில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் கூடங் குளம் அணு உலையாகும்.  தமிழினத்தை தலைமுறை தலை முறையாக அழித்துவிட்டு வட நாட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் தடை யில்லாத மின்சாரத்தை வழங்கு வதற்கு முனைந்திருக்கிறது இந் திய அரசு.

 கட்டி முடித்துவிட்டார்கள் தடுத்து நிறுத்த முடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும்.  தமிழினத் திற்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியமும் சர்வத்தேசியமும் இணைய வேண்டும் தி.க.சி. மடல்




அருமைத் தோழர் மணியரசன் அவர்களுக்கு,

வணக்கம். 8.10.11 சனிக்கிழமை மாலையில், பேராசிரியர் அறிவரசன் என்னைச் சந்தித்தார்; தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தோழர் பா.செயப் பிரகாசம் தலைமையில் நிகழ்ந்த, ‘வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக்கள’த்தில், இலக்கியத் துறையில் சாதனைக்காகத் தாங்களும், தங்கள் இயக்கமும் எனக்கு வழங்கிய விருது, பரிசு மற்றும் பாராட்டுப் பொருள்களைத் தோழர் அறிவரசன் எனக்கு வழங்கினார்.

மிகுந்த பெருமையுடனும், தன்னடக்கத்துடனும், பூரிப்புடனும் அவற்றை ஏற்றுக் கொண்டேன்; உளம் மிக நெகிழ்ந்தேன்; அவ்வமயம், என் உணர்ச்சிகளைத் தெரிவிக்க, என்னிடம் சொற்கள் இல்லை! தங்களுக்கும், தமிழ்த் தேசிய உரிமைகளுக்காக அயராது போராடும் தங்களது அமைப்புக்கும், ஏட்டுக்கும், செயற்குழுவினருக்கும், ஆதர வாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி; தலை தாழ்ந்த வணக்கம்.

அக்டோபர் 1-15 தமிழர் கண்ணோட்டம் இதழ் பெற்றேன். “புதிய பாய்ச்சல்! புதிய வீச்சு!” எனும் முகப்பு அட்டை முழக்கத்திற்கு ஏற்ப, தமிழர் கண்ணோட்டம் ஒவ்வொரு இதழும், புதிய ஆயத் தங்களுடன், புதிய புதிய படைப்பாளிகளின் பன்முகப் படைப்புகளுடன் வெளிவரும் என நம்புகிறேன். புதியதோர் உலகம் செய்யத் தங்கள் இதழுடன், எல்லாவகையிலும் ஒத்துழைப்பேன்; தமிழ்த் தேசியமும் சர்வதேசியமும் இணைந்த விடுதலைப் பாதை யில் மக்களை அணி திரட்டு வது, ஒன்றுபடுத்துவதே, இன் றைய நமது உடனடிக் கடமை யாகும்.

என்றும் தோழமையுடன்,
தி.க.சி., நெல்லை.

தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை? – 2 பேராசிரியர் க.நெடுஞ்செழியன்


வினை மறுப்பு
எந்தக் கருமக் கோட்பாடு தமிழர்களைக் கட்டிப் போட்டதாகக் க.ப.அறவாணன் கூறு கிறாரோ அதே கருமக் கோட்பாட்டை எதிர்த் தவன் கோப்பெருஞ்சோழன் ஆவான். ‘நல்வினை செய்தால் நன்மை கிடைக்கும்;, அதனால் நன்மை செய்யுங்கள்; என்று கூறுபவர்களின் கூற்று ஐயத்தினின்று நீங்காதது, குற்றம் நிறைந்தது’ எனும் பொருளில் அமைந்த பாடலடிகள்.

செய்குவங் கொல்லோ நல்வினை எனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி

என்பன. இங்குச் சொல்லப்படும் நல்வினை என்பது வைதிகத்திற்கு உரியதா அல்லது சைனத்திற்கு உரியதா என்பது ஆய்வுக்குரியது. எனினும் கருமக் கோட்பாட்டை எள்ளி நகை யாடும் சிந்தனைப் போக்கே இங்குக் குறிக்கத் தக்கதாகும்.

கருமக் கோட்பாட்டு எதிர்ப்புணர்வு என்பது தமிழர்களின் குருதியோட்டத்தில் கலந்த ஒன்று என்பதைப் பிற்கால பக்தி இலக்கியங்களும் பறை சாற்றுகின்றன. சைவத்திலும், வைணவத்திலும் அடியூற்றாய் ஓடும் ‘சரணடைதல்’ என்பது கருமக் கோட்பாட்டு எதிர்ப்பின் அடையாளம்.

சிட்ட னைச்சிவ னைச் செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே (4:104:1)
அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழ கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே (4:105:1:3-4)

ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம் மேலை வினைகளே (4:105:4:3-4) 

என வரும் திருநாவுக்கரசரின் பாடல்கள் அக்கருத்துக்கான அடையாளங்கள். திருநாவுக்கரசர் கபாலிகப் பிரிவினர். திருஞான சம்பந்தரோ காளாமுகப் பிரிவைச் சார்ந்தவர். கபாலிகச் சைவம் ஆகம முறைகளைப் பின்பற்றி யது. காளாமுகப் பிரிவோ வேதத்தை அடிப்படை யாய்க் கொண்டது. தமிழகச் சிவன் கோயில்களில் நடைமுறையில் இருந்த ஆகம முறைகளை மாற்றி வைதிக நடைமுறைகளைப் புகுத்திய கொடு மையை அரங்கேற்றியவர் திருஞானசம்பந்தரே ஆவார். கபாலிக- காளாமுக மோதல், ஆகம முறைகளுக்கும், வைதிக வேள்விப் பண்பாட் டிற்கும் இடையே நடந்த மோதலாகும். அதன் அடையாளமே திருமரைக்காட்டில் அடைக் கவும் திறக்கவுமாக அவ்விரு நாயன்மார்களும் பாடியதாகும். ஆகம முறைகளுக்கு மாற்றாக வேத நெறியைப் புகுத்தியதால் சைவம் வைதிக மயமானது.

ஆனால் வைணவம் அவ்வாறு வைதிக நெறிகளுக்கு அடிமை ஆகாததுடன் தமிழ் மரபை இன்றளவும் பேணிப் பாதுகாத்து வருகிறது. இத்தன்மைகளைப் பேராசிரியர் கே.கே.பிள்ளை,

வைணவக் கோயில்களில் மூர்த்தியின் அண்மை யில் அமர்ந்து நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு. வைணவ மரபுக்குக் கிடைத்துள்ள உரிமையாகும் இது. இவ்வுரிமையை இன்றளவும் சைவக் கோயில்களில் திருமுறைகளை ஓதுவதற்குப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூர்த்திக்கு அண்மையில் வடமொழி மந்திரங்களை உச்சரிப்பதும், தொலை வில் குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் நின்று ஓதுவார்கள் திருமுறைப் பாடல்களை இசைப்பதும் மரபாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் தென் னாடுடைய சிவன் கோயிலில் தமிழிசை முழங்கும் உரிமை யைச் சைவ வழிபாட்டினர் பெறவில்லையா, அல்லது பெற்றி ருந்த உரிமையை இழந்து விட் டார்களா? அப்படியாயின் இழந்த உரிமையை மீண்டும் பெறு வதற்கு அவர்கள் முயன் றார்களா என்பதற்கு வரலாற்றுச் சான்றான விளக்கம் கிடைக்க வில்லை.

என விளக்கக் காணலாம். வைணவத்தின் தென்கலைப் பிரிவை நிலைநாட்டிய இராமா னுசர் தமிழர்களால் நன்றி யோடு நினைக்கத்தக்க மாமனி தராவார்.

சைவக் கோயில்களில் முழங் கிய தமிழ் முழக்கம் என்று மறைந்ததோ, அக்கோயில்களில் என்று வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கினவோ அன்றுதான் தமிழனின் தலை தாழ்ந்தது. அப்படித் தாழச் செய்த கொடுமையைச் செய் தவர் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன்” என்பது ஒரு முரண்நகை (மிக்ஷீஷீஸீஹ்) யாகும்.

சைன சமயத்தின் கருமக் கோட்பாடு அறநெறியின் பாற் பட்டது. வைதிகத்தின் கருமக் கோட்பாடோ சமூகச் சுரண்ட லின் வடிவம்; மனித விழுமி யங்களைத் தீய்க்க வந்த காட்டுத் தீ. இவற்றுள் கண்டிக்க வேண்டி யதும், தமிழர்களால் வர லாற்றுக் காலந்தொட்டுக் கண் டிக்கப்பட்டு வருவதுமான வை திகக் கருமக் கோட்பாட்டைப் பற்றிக் க.ப.அறவாணன் எது வுமே கூறாதது வியப்பாக இருக்கின்றது. அப்படி அவர் அமைதி காப்பதற்கான காரண மும் நமக்குப் புரியவில்லை.

சைன சமயக் கடவுள் மறுப் பில் தொடங்கி, ‘அவ்விய நெஞ் சத்தான் ஆக்கமும்’; எனும் திருக்குறளில் முடிவடையும் இக்கட்டுரை, குழந்தைகள் சொல்லும் கதையைப் போலத் தொடர்பின்றி நிறைவடை கிறது. அத்திருக்குறளுக்கு அவர் தரும் விளக்கமும், அதனைப் பயன்படுத்தும் இடமும் கூட ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நிற்கின்றன.

சமூகத்தில் கெட்ட எண்ணம், கெட்ட பேச்சு, கெட்ட செயல் ஆகியவற்றை உடைய அவ் வியான், செல்வம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றில் மிக உய ரத்தில் இருக்கிறான். மறுதலை யாக நல்ல எண்ணம் நல்ல பேச்சு, நல்ல செயல் உள்ளவன் மிக நொடித்துப்போய் கடைத் தட்டில் நிற்கிறான். இவ் இரு நிலையும் அப்படியே ஏற்கத் தக்கவை அல்ல. சரியா என்று ஆராயத்தக்கது என்பது வள்ளு வர் கருத்தாக உள்ளது. அவர் தம் கருத்தையும் நாம் உச்சமாக நினைத்துக் கருத வேண்டும்

என வேண்டுகோளுடன் கட்டுரை முடிகிறது. அவர் விளக்கும் திருக்குறள்,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
என்பதாகும்.

ஐயம்
தமிழர் மெய்யியல் - அள வையியலில் ஐயத்திற்குத் தலை யாய இடம் உண்டு. காட்சி,- ஐயம், தெளிவு எனத் தருக்க வியல் அமையும். ஒரு பொரு ளைக் காண்பது முதல் நிலை; அது மரத்துண்டா, மனிதனா என முடிவு காண முடியாதத் தன்மை ஐயம். பல்வேறு சான்று களால், மனிதனல்லன் மரம் என்றோ, மரம் அல்ல மனிதன் என்றோ முடிவு செய்து ஒரு தெளிவிற்கு வருவது தெளிதல் என்பதாகும். இதே தருக்க முறையினால், மெய்யியல் முடிவுகளையும் எட்ட வேண் டும் என்பது இலக்கணம். வள்ளுவர்,

ஐயத்தின் நீங்கித் தெளிந் தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து
என்பார்.

அந்த வகையில் மெய்யியலில் ஐயம் தலையாய இடத்தை வகிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தெளிய முடியாத ஐயங்களும் உண்டு. அத்தகைய ஐயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்கான விடை யை வழங்கியது எண்ணியம் (சாங்கியம்) ஆகும்.

விடை காணமுடியாத - உறுதி செய்ய முடியாத உண் மைகளைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது என் பது அதன் கருத்து. எனவே தான், தீயமனம் படைத்த ஒருவன், தீய வழிகளில் பொரு ளீட்டிய ஒருவன் செல்வம், செல்வாக்கோடு வாழ்வதற்கும், நல்ல ஒழுக்கமும் நல்ல மனமும் நல்ல செயல்களையும் உடைய ஒரு மனிதன் துன்பங்களில் உழல்வதற்கும், ஊழ்தான் கார ணம் என்றோ அல்லது கரும வினைதான் காரணம் என்றோ கூறக் கூடாது. அவ்விரண்டு நிகழ்வுகளும் ஆராயத்தக்கது - அதாவது நினைக்கத் தக்கது அவ்வளவே என்பது அக் குறளின் கருத்தாகும். நினைக் கப்படும் என்பதற்கு ஆராயப் படும் என்பது பொருளாகும்.

தொல்காப்பியர் குறிப்பிடும், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா எனும் நூற்பாவின் கருத்தும் இங்கே எண்ணத்தகும். ‘எல்லாச் சொல் லும் பொருள் குறித்தனவே’ எனக் கூறிய தொல் காப்பியர், சொல்லுக்கும் அதன் பொரு ளுக்கும் உள்ள உறவுக் -காரணம் யாது எனக் கேட்டால் அதற்கு விடை தர முடியாது எனக் கூறுவதைப் போன்றதுதான் ‘அவ்வியான் ஆக்கமும் செவ்வி யான் கேடும் ஆராயத் தக்க தேயன்றி விடை காணத்தக்க தன்று எனக் கூறுவதும்’ ஆகும்.

திருக்குறளின் மெய்யியல் எது? அதன் காலம் எது? எனும் கேள்விகளுக்கான விடையாக அமைந்த ஒருசில குறள்களில் இதுவும் ஒன்றாகும்.

கருமக் கோட்பாட்டை வைதிகம் உருவாக்கிச் செயல் படத் தொடங்கிய தொடக்க நாள்களிலேயே, அது தமிழ் அறிஞர்களின், - சமூகச் சிந்தனை யாளர்களின் - கடுமையான கண் டனத்திற்கு உள்ளானது என் பதே உண்மை. அது ஒரு போதும் தமிழர்களைக் கட்டிப் போடவில்லை. அதிலும் சைன சமயத்தின் கருமவினைக் கொள்கை சைன சமய ஏடுகளிலேயே நின்று விட்டது. அப்படி இருந்தும் இந்தியச் சமூகம், குறிப்பாகத் தமிழினம் எதனால் அடிமைப்பட்டது? எதனால் சீர் குலைந்தது? முதற்காரணம் அறிவுக்கான தடை. இரண்டாவது காரணம்,  பார்ப்பனியம்!

பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் பார்ப் பனர்கள் ஒரு சமூகம் என்ற வகையில் கொண்டிருக்கும் அதிகாரம், சிறப்புச் சலுகைகள், நலன்கள் என்பன அல்ல. நான் அந்தப் பொருளில் இச் சொல் லைப் பயன்படுத்துவதில்லை. பார்ப்பனியம் என்பதற்கு நான் கொள்ளும் பொருள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்ற உணர்வின் மறுப்பு என்ப தாகும்... பார்ப்பனர்கள்தாம் அதன் மூலகர்த்தாக்கள் என்ற போதிலும் அவர்களோடு அது மட்டுப்பட்டு இருப்ப தில்லை. பார்ப்பனியத்தின் விளைவுகள் என்பன கலந்துண் ணல், கலப்புத் திருமணம் போன்ற சமூக உரிமைகளை மறுப்பதோடு மட்டும் நின்றுவிட வில்லை. அது குடிமை உரிமை களையும் (சிவீஸ்வீறீ ஸிவீரீலீts) மக்க ளுக்கு மறுத்தது. பொருளியல் வாழ்க்கையையும் கூட பாதிக்கும் அளவிற்குப் பார்ப்பனியம் அனைத்து வல்ல மையும் பொருந் தியதாக உள்ளது.

இவ்வாறு அம்பேத்கர் கூறுவதில் பொருளுள்ளது.

சங்க காலத்திலிருந்து தொடர்ந்த பகுத்தறிவுப் போராட்டம், வைதிக எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய யாவும் இன்றும் பெரியாரியலாக - மார்க்சியமாகத் தொடர்ந்தபடிதான் உள்ளன.

மனுநீதி அறமான தொருநாள் - அதை
மாற்றும் நாளே தமிழர் திருநாள் 
என்ற புரட்சிக் கவிஞரின் வேண்டுகோள் செயல்படும் நாளில் நாம் மீண்டெழுவோம்.          


                  தொடர்புக்கு : 9894967911

பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பலியானோர் குடும்பங்களைச் சந்தித்தனர் த.தே.பொ.க. தலைவர்கள்


பரமக்குடியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்பத் தினரையும், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பழநிக்குமார் குடும்பத் தினரையும் நேரில் கண்டு ஆறுதல் சொல்ல, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, குழ.பால் ராசு, அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரெ.இராசு, மு.தமிழ்மணி, பரமக்குடித் தோழர்கள் இரா.இளங்கோ, தோழர்கள் கோ.இராமசாமி, கா.வே.முருகேசன், வழக்குரைஞர் பசுமலை, பொறியாளர் அறிவுடை நம்பி, வழக்குரைஞர் லிங்கமூர்த்தி, வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மதுரை வீரன், பி.எஸ்.ஐ.கனி (எஸ்.டி .பி.ஐ.), அம்பேத்கர், ஓட்டுநர் ரெ.ரெங்கராசு ஆகியோர் இரு ஊர்திகளில் 18.10.2011 அன்று புறப்பட்டோம்.

ஏடுகளில் படித்ததை விடவும் கொடுமை யாகவே காட்டுமிராண்டித் தனமாகவே காவல் துறையின் துப்பாக்கி வெறியாட்டம் நடந்திருப் பதை நேரில் கிடைத்த செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

த.தே.பொ.க. குழுவினர் முதலில், கீழக்கொடு மலூர் சென்றனர். அவ்வூரைச் சேர்ந்த 22 அகவை உள்ள தீர்ப்புக்கனி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு அவர் மீது நடத்தப்படவில்லை. அம்மாணவர் பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்தி ரவியல் பட்டயத்தில்(டி.எம்.இ.) இரண் டாம் ஆண்டு படித்து வந்தார். காவல் துறையினர் கண்மண் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டும், தடியால் அடித்தும் வேட்டையாடியதில் தடிய டியில் இறந்துள்ளார் தீர்ப்புக்கனி.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இம்மாணவரின் தந்தை வேலு, தாயார் செல்வம் ஆகியோருடன், அக்கம் பக்கம் உள்ள மக்கள் ஒன்றாகக் கூடி த.தே.பொ.க. தோழர்கள் சென்றதும் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் காவல் துறையினர் நடத்தியக் காட்டுதர்பாரை எடுத்துச் சொல்லி அப்பாவி மாணவன் தீர்ப்புக்கனியை அடித்தேக் கொன்று விட்டார்கள் என்று துயரத்தோடு கூறினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய தோழர் பெ.மணி யரசன், அவர்களுக்கு நீதி கிடைக்க த.தே.பொ.க. முன்னெடுத்த போராட்டங்களை எடுத்துச் சொன்னார்.

தீர்ப்புக்கனி உள்ளிட்டோரை கொலை செய்த காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் பலியான குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும், காயம் அடைந்தோருக்குத் தலா ரூ.5 இலட்சம் இழப் பீட்டுத் தொகை வழங்க வேண்டும், உயிரிழந் தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து த.தே.பொ.க. பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும், தொடர்ந்து அக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதையும் தோழர் பெ.ம. எடுத்துச் சொன்னார்.

அடுத்து, மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி நோக்கி ஊர்திகள் விரைந்தன.

மண்டல மாணிக்கம் மிகப்பெரிய கிராமம். அவ்வூரில் அனைவரும் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். பிற வகுப்பினர் யாரும் இல்லையென்று கூறுகிறார்கள். குறுகலான மறவர் தெரு வழியாகத்தான் அடுத்துள்ள பள்ளப் பச்சேரிக்குப் போக வேண்டும்.

பள்ளப்பச்சேரியில் அனைவரும் பள்ளர் (தேவேந்திரர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வட்டாரத்தில் ‘பச்சேரி’ என்பது அட்டவணை வகுப்பு மக்கள் குடியிருக்கும் ஊரை பகுதியைக் குறிக்கிறது. மண்டல மாணிக்கம் ஊராட்சியில் பள்ளப்பச்சேரி, கழுவன் பொட்டல், இடைச்சிவூரணி, பெருமாள் தேவன் பட்டி, மூலைக்கரைப்பட்டி, வடுகப் பட்டி, முத்துப்பட்டி, கோடாங் கிப்பட்டி ஆகிய சிற்றூர்கள் இணைக்கப் பட்டுள்ளன. மண் டல மாணிக்கம் மறவர் தெருக் களைக் கடந்து பள்ளப்பச்சேரி போகும் போது தெருக்களின் முடிவுப் பகுதியில் ஒரு சிறு திடலில் கூட்டுறவு சங்கக் கிடங்கு(குடோன்) இருக்கிறது.

பரமக்குடி தோழர் இளங் கோவன் அந்தச் சுவரின் கிடங் கைக்காட்டி, அந்த சுவரில் எழுத்துகள் அழிக்கப்பட்டு, கரையாக உள்ள அடை யாளத்தைக் காட்டி இதில்தான் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி ஏதோ இழிவாக எழுதி யிருந்தது என்றும், பழநிக்குமார் தான் அதை எழுதினான் என்று முடிவு செய்து சாதிவெறியர்கள் பழநிக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள் என்றும் கூறினார். ஊர்தியை சற்று நிறுத்தி அதை உற்றுப்பார்த்து விட்டு பள்ளப்பச்சேரிக்குப் புறப்பட்டோம்.

பழனிக்குமார் தந்தை தங்க வேல், தாய் புவனேசுவரி ஆகி யோரைச் சந்தித்தோம். அப் பகுதி மக்கள் கூடி விட்டனர். பழனிக் குமார் தாயார் புவனே சுவரி நடந்த நிகழ்வுகளை சொன்னார்.

“எங்க தெரு பையன்கள் மறவர் தெரு ஓரம் உள்ள குடோன் திடலுக்கு விளை யாடப் போக மாட்டார்கள். என் மகன் மிகவும் குள்ள மானவன். அவர்கள் சொல்லு கிற மாதிரி அந்த சுவரில் எழுதுவதென்றால் வளர்ந்த ஆள் கையெடுப்பு உயரத்தில் எழுதியிருந்தால் தான் உண்டு. என் மகனுக்கு அந்த உயரம் எட்டாது.

"சம்பவம், நடந்த அன்று (9.09.2011) இரவு பக்கத்து ஊரான முத்துராமலிங்கபுரத் தில் நாடகம் பார்த்து விட்டு 12.30 மணிக்கு என் மகனும், என் அண்ணன் மகனும் எங்க ஊருக்கு வந்து கொண்டி ருந்தார்கள். வேலிக் கருவை மறைவில் காத்திருந்த கும்பல் ஒன்று இந்த இரண்டு பேரையும் வழிமறித்திருக்கிறார்கள். என் அண்ணன் மகன் ஓடி விட் டான். என் மகனைப் பிடித்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார்கள். என் மகன் அந்த வாசகத்தை எழுதினதாகவே வைத்துக் கொண்டால் கூட, அதற்காக அவனை இரண்டு அடி அடித்து மிரட்டி விரட்டி யிருக்கலாம். படுபாவிகள் அந்த பிஞ்சுமுகத்தைக் கூட பார்க் காமல் கொலை செய்து விட் டார்கள்” என்று கூறி குமுறி அழுதார்.

“இழிவாக எழுதப்பட்டிருந்த வாசகங்களுக்காகவா கொலை செய்துவிட்டார்கள்?” என்று பெ.ம.வும், கி.வெ.வும் கேட் டார்கள். அதற்கு அங்குள்ள வர்கள், “பதினோறாம் தேதி (11.09.2011) நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூசைக்கு அங்கிருந்து யாரும் போகாமல் தடுக்கவும், திசைமாற்றி அவ்விழாவை குழப்பிவிடவும் திட்டமிட்டு செய்த சதிதான் பழனிக்குமார் கொலை. 8ந்தேதி(08.09.2011) டி.எஸ்.பி. இங்கு வந்து ‘குடோன் சுவரில் தேவரைப் பற்றி இழி வாக உங்கள் தெருக்காரர்கள் எழுதியிருப்பதாக மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த முக்கி யஸ்தர்கள் சொன்னார்கள். அதை நான் பார்த் தேன். அதை யார் எழுதினது என்று கண்டு பிடிக்க வேண்டும்’ என்றார். மறுநாள் எங்கள் ஊர் குடிநீர் கிணற்றில் விசத்தைக் கலந்து விட்டார்கள். அன்று இரவு பழனிக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள்” என்றார் கள்.

அடுத்து அந்த மக்கள் உள் ளம் குமுறிச் சொன்ன குறைகள் பல.

“பள்ளப்பச்சேரியிலிருந்து நாங்கள் வெளியே செல்வ தென்றால் குறுகலான மறவர் தெரு வழியாகத் தான் செல்ல வேண்டும். எங்களுக்கு தனிச் சாலை போட்டுத் தர வேண்டும். மண்டல மாணிக்கத்திற்கு குடி நீர் மேல்நிலைத் தொட்டி இருக்கிறது. ஆனால் எங்கள் கிராமத்திற்கு மேல்நிலைத் தொட்டி கிடையாது. பக்கத்தில் குண்டாற்றில் ஊற்று தோண்டி அதிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். மண்டல மாணிக்கம் ஊராட்சி தனித் தொகுதியாக அட்டவணை வகுப்பினருக்குக் கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் போட்டியிட முடி யாது. போட்டியிட்டால் எங்க ளைத் தாக்குவார்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பக்கத்தூர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஊராட்சித் தலைவராக ஆக்கி யுள்ளார்கள். மறவர் சமூகத்தின் சொல்படி நடக்கக் கூடியவராக அவ்வூராட்சித் தலைவர் இருக் கிறார்

"எங்கள் கிராமத்திற்கு மேல் நிலைத் தண்ணீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும். பக்கத்திலுள்ள சில கிராமங் களை எங்கள் கிராமத்துடன் இணைத்து பள்ளப்பச்சேரியை மண்டல மாணிக்கத்திலிருந்து பிரித்து தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும்” என்றார் கள்.

இந்த மூன்று கோரிக்கை களும் நியாமானவை. இவற்றை நிறைவேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்தும் என்று உறுதிபடக் கூறினார், தோழர் பெ.ம.

பள்ளிச்சிறுவன் பழனிக் குமாரைக் கொலை செய்தவர் கள் என்ற குற்றச்சாட்டில் மண்டல மாணிக்கம் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆபுத்திரன் (நியாய விலைக்கடை ஊழியர்), ஆறுஓட்டு ஆறுசாமி, கருப்ப சாமி, பச்சைமால், மணி கண்டன் ஆகிய ஐவர் தளைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். முக்கூரன் என்பவர் தலை மறைவாக இருக்கிறார்.

பால்மணம் மாறாப் பாலகன் என்று சொல்லத்தக்க இளந் தளிர் பழனிக்குமார் ஒரு பெரிய சமூகத்திற்கு ஒரு பெரிய பகை வனாகிவிட்டானா? ஒழித்துக் கட்ட வேண்டிய எதிரியா அவன்? அவன் தாயார் சொன் னது போல, அவன் மீது அவர் களுக்கு ஐயப்பாடு இருந் தால் ரெண்டுத் தட்டுத்தட்டி எச்ச ரித்து அனுப்பியிருக்கலாமே!

சாதி உணர்ச்சி - வெறியாக மாறி - தன்சாதியைக் கேள்வி கேட்கும் பிற சாதியைப் பழிவாங்க வேண்டும் என்ற வன்மமாக வளர்ந்து சிலர் இத்தீச்செயலில் இறங்கியுள் ளனர். பழனிக்குமாரைக் கொலை செய்தவர்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத் தின் கீழ் தண்டிக்கப்பட வேண் டியவர்கள். தமிழக அரசு, பழனிக்குமார் குடும்பத்தில் ஒருவர்க்கு வேலை தருவது மிகவும் தேவை.

பள்ளப்பச்சேரியிலிருந்து கிளம்பி, வீரம்பல் கிராமம் சென்றோம். 54 அகவையுள்ள பன்னீர் நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து  இறந்து போனார். அவர் ஊர் வீரம்பல். த.தே.பொ.க. தோழர் பெகின் அவ்வூரைச் சேர்ந்தவர். அவர் பன்னீர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பன்னீரின் தாயார் புட்பம் அம்மையார் தான் வீட்டில் இருந்தார். பன்னீர் மனைவி சிரோன்மணி, மகன் அம்பு ரோஸ், மகள் ரெபேக்காஸ் ஆகியோர் வெளியூர் சென்றி ருந்தனர்.

காவல்துறையினர் துப் பாக்கிச் சூடு நடத்தும் முன் கடைபிடிக்க வேண்டிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் கடைபிடிக்கவில்லை என்பதற்கு பன்னீரின் நெற்றி யில் குறிபார்த்து அவர்கள் சுட்டதொன்றே தக்க சான் றாகும். துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை எழுந்தால், முழங்காலுக்குக் கீழ் சுட வேண்டும் என்ற விதியைக்  காவல்துறையினர் கடை பிடிக்க வில்லை.

பிறகு சடையனேரி சென் றோம். இளம்பெண் ஒருவரைக் காட்டி, இவர் கணவர் தான் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக் குமார் என்றனர் அங்கு சூழ்ந்து கொண்ட மக்கள். 24 அகவைக் குள் இருக்கும் பாண்டீசுவரி சோகமே உருவெடுத்து நின்றார். சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக் குமாரின் அகவை 26. நேதாசி என்ற 4 அகவை மகனும், காவியா என்ற இரண்டரை அகவை மகளும் இவர்கள் குழந்தைகள். முத்துக்குமாரின் பெற்றோர் ஞானப்பிரகாசமும், முனியம்மாவும் “எங்கள் மகன் பிணமாய்க் கிடக்கும் செய்தி இரண்டாம் நாள் தான் எங்களுக்குத் தெரிந்தது” என்று சொல்லி குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொண் டனர்.

வெளியிலிருந்து செல்லும் நமக்கே, இந்த இளம் அகவை யில் கணவனைப் பறிகொடுத்து விட்ட பாண்டீசுவரியின் சோ கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் ணுக்கும், முத்துக்குமார் பெற் றோர்க்கும் யார் ஆறுதல் சொல்ல முடியும்? தமிழக அரசு பாண்டீசுவரிக்கு ஒரு வேலை கொடுத்தால், கொலைப் பழிக்குக் கழுவாயாக அமையும்.

அடுத்து ஆறுதல் கூறப் போன இடம் இதைவிடக் கொடுமையானது. மஞ்சூரைச் சேர்ந்த செயபால். இருபதே அகவையான இளைஞர். காவல் துறையினர் இவரை துப்பாக்கி யால் சுட்டு இளையான்குடி சாலையில் தூக்கி வீசிவிட்டனர். அவர் மனைவி காயத்திரிக்குப் பதினெட்டு அகவை. காயத்திரி யின் தாயார் ரேவதி பரமக்குடி உழவர் சந்தைக்கு அருகில் பழவணிகம் செய்து வருகிறார். நிறைமாதக் கர்ப்பிணியான காயத்திரி மகப்பேறுக்காக பரமக்குடி தாய்வீட்டிற்கு வந் துள்ளார். மஞ்சூரிலிருந்து மனை வியைப் பார்க்க வந்த செயபால், பரமக்குடியில் காவல் துறை யினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

"இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன்" என்று கைபேசியில் மனை விக்குச் சேதி சொன்ன செய பாலைக் காணாமல் மாமியார் ரேவதியும், காயத்திரி அண்ணன் தம்பியும் தேடினார்கள். செய பால் சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்து, காயத்தி ரியுடன் தொடர்பு கொண்ட காவல்துறையினர், செயபால் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன செய்தியைச் சொல்லா மல் மறைத்து விட்டனர். அலையோ, அலையென்று அலைந்து மறுநாள் தான் இராமநாதபுரம் மருத்துவம னையில் செயபால் உடலை அடையாளம் கண்டார் ரேவதி அம்மாள்.

காயத்திரியும் - செயபாலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். காயத் திரி வெள்ளாளர் வகுப்பு. செயபால் தேவேந்திரர் வகுப்பு. 11.09.2011 அன்று செயபால் சுட்டுக் கொல்லப்பட்டார். 29.09.2011 அன்று காயத்திரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்தால் தர்சன் என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தாராம் செயபால். தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதால் வீரதர்சன் என்று அக்குழந் தைக்குப் பெயர் சூட்டி யுள்ளனர்.

கையில் ஏந்தப் போகும் தன் குழந்தை பற்றிய கனவுகளோடு, கர்ப்பிணி மனைவியைக் காண வந்த கணவனைக் காவல்துறை யினர் சுட்டுக்கொன்று விட்ட னர். இருபது அகவை மட்டுமே ஆன இளம் கணவனை பறி கொடுத்துவிட்டு 20 நாள் கைக் குழந்தையுடன் கைம்பெண் ணாய் எங்கள் கண்முன் நிற்கிறாள், 18 அகவை காயத்திரி! இப்பெண்ணுக்கு யார் என்ன ஆறுதல் சொல்லி விட முடியும்?

துயரம் தொண்டையை அடைக்கச் சில சொற்கள் ஆறு தலாகக் கூறினர், த.தே.பொ.க. தலைவர்கள். “இந்த காயத் திரிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமாவது, எங்காவது சமூக அக்கறை கொண்டவர்கள் நடத்தும் நிறுவனமொன்றில் வேலை வாங்கித்தர வேண்டும்” என்றார் வீட்டை விட்டு வெளியே வரும் போது, தோழர் பெ.ம.

காயத்திரி வீட்டை விட்டு வெளியே வரும் போது இரவு 9 மணி. துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன, காயம்பட்டுள்ள ஏனையோர் வீடுகளுக்கு செல்வ தற்குள் இரவாகி விட்டது. பல்லவராயனேந்தல் கணே சன்(54) காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காக்கனேந்தல் வெள்ளைச்சாமி (54) காவல்துறையினரால் அடித் தேக் கொல்லபட்டார். இவ் விருவர் இல்லங்களுக்கும் செல்ல முடியவில்லை.

விடிந்தால் காலை 10 மணிக்குக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட் டத்தில் கலந்து கொள்ள வேண் டிய பணி இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியதோடு மட்டும் நாம் நிற்கக் கூடாது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக த.தே.பொ.க. ஏற்கெனவே முன் வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அத் துடன், பள்ளப்பச்சேரி மக்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசை அணுக வேண்டும். காவல்துறை காவு கொண்டதால் கணவனை இழந்து கைம்பெண்ணாய் நிற்கும் பாண்டீசுவரி, காயத்திரி ஆகியோர்க்கு வேலை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற உறுதியைத் த.தே.பொ.க. தலை வர்கள் தம்முடன் வந்த குழு வினருடன் பகிர்ந்து கொண் டனர்.

“அணுஉலை ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்தியா பாதுகாக்காது” சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டங்கள்


”தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையிடமிருந்து பாதுகாக்காத இந்திய அரசு, அணு உலை ஆபத்திலிருந்தும் தமிழகத்தைப் பாதுகாக்காது” எனக் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று மாலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

இந்திய அரசின் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து, இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் அம்மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், கூடங்குளம் மற்றும் கல் பாக்கம் அணுஉலைகளை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது பேசிய அவர், ”கூடங்குளம் அணுஉலையின் ஆபத்தி லிருந்து தமிழகத்தை இந்திய அரசு பாதுகாக்காது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை இந்திய அரசுக்கு எப்போதுமே இருந்த தில்லை. நேற்று 4 சுறா மீன்களைப் பிடித்து விட்ட தாகக் கூறி இந்தியக் கடலோரக் காவல்படை, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதுவரை 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள இனவெறிக் கடற்படை நடுக்கடலிலும் தமிழகக் கடலோரத்திலும் சுட்டு வீழ்த்திய போதும், நம் மீனவர்களை நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி, வலை களை சேதப்படுத்தி கொடுமை புரிந்த போதும் அதைத் தடுக்க இந்தியக் கடற்படை முன்வரவில்லை. ஆனால், சுறா மீன்களைப் பாதுகாக்கிறோம் என இந்தியக் கடற்படை, நம் மீனவர்களை கைது செய் திருக்கிறது. சுறா மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, நம் தமிழ்நாட்டு மீனவனுக்குக் கிடையாதா? 

இப்படிப்பட்ட இந்திய அரசு தான் இலட்சக் கணக் கில் தமிழீழ மண்ணில் நம் சொந்தங்களை கொல்ல உதவியது. இதே தமிழினப் பகையுடன் தான், நமக்குக் காவிரி நீரை மறுக்கும் கர்நாட கத்திற்கும், முல்லைப் பெரியாற்று நீரை மறுக்கும் கேரளத் திற்கும், பாலாற்று நீரை மறுக்கும் ஆந்திரத் திற்கும் தமிழ்நாட்டின் நெய்வேலியிலிருந்து மின்சா ரத்தை அனுப்புகிறது. வடநாட்டு முதலாளிகளுக்கும், பன் னாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்புகிறது. 

இப்படி தமிழின விரோதத்தை நெஞ்சில் சுமந்து செயல்பட்டு வரும் இந்திய அரசு, கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளால் வரும் ஆபத்துக் களில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் என்று நாம் எப்படி நம்புவது? நிச்சயமாக பாதுகாக்காது. நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கப் பெற்றால், இங்கு மின்வெட்டு கிடையாது. நாம் மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருப்போம். மேலும், காற்றாலை, கதிரவன் ஒளி, கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்பதையும் நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, மனித உயிருக்கு உலை வைக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டக் கூடாது.

எனவே, கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், நெய்வேலி மின்சாரத்தை முழுவதும் தமிழகத்திற்கே வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்திப் பெற வேண்டும்”  என்றார். 
மேலும், கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ‘அணுஉலை எதிர்ப்பு மாநாடு’ திசம்பர் 11 அன்று நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். 

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் மற்றும் பொதுச் செயலாளர் திரு.தேவராசு, கல் பாக்கம் அணுமின் நிலையக் கதிர்வீச்சுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட மருத்துவர் வீ.புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் எழுச்சி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, தமிழர் குடியரசு முன்னணி ஒருங் கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராய ணன், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப் பினர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

திருச்செந்தூர் 

திருச்செந்தூர் பேரூராட்சி மன்றம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மணி தலை மை தாங்கினார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தோழர் பால்ராசு, தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகி தோழர் துரை அரிமா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி னர்.திரளான பெண்கள் இதில் பங்கேற்றது குறிப் பிடத்தக்கது. 

ஓசூர்

ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங் கினார். பா.ம.க. மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு.விசுவ நாதன், ஈரம் அமைப்பின் செயலாளர் திரு.பழ.பால சுந்தரம், ம.தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் திரு. இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் செந்தமிழ், தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் முரு கேசன், பெ.தி.க. அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி, பசுமைத் தாயகம் அமைப்பாளர் தோழர் சு.முருகன், த.தே.பொ.க. செயலாளர் தோழர் ரமேசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப் பினர் தோழர் கோ.மாரி முத்து பேசினார்.

தஞ்சை

24.10.2011 அன்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் தொடர் வண்டி நிலையம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர்  தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. பட்டுக்கோட்டை  செய லாளர் தோழர் வெ.இராசேந்திரன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் முரு கய்யன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப் பினர்கள் தோழர் லெ.ராமசாமி, தோழர் க.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

செங்கிப்பட்டி

24.10.2011 மாலை தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சாணூரப்பட்டி கடை வீதியில் கொட்டும் மழைக்கிடையே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தேபொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. இரா.நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. விடுதலைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண் முகம்,தோழர் ச.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் தோழர் சா. புண்ணியமூர்த்தி, த.இ.மு. ஒன்றிய செயலாளர் தோழர் கெ.செந்தில்குமார், மக்கள் உரிமை இயக்க செயலாளர் தோழர் பழ.இராஜ்குமார், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மீனா, நாம் தமிழர் அமைப் பாளர் தோழர் பி.அற்புதராஜ், த.இ.மு. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.ரமேஷ், த.தே. பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ந.கருப்பு சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தின் நிறைவில், த.தே.பொ.க. தலைமைச் செயற் குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் நிறை வுரையாற்றினார். 

சிதம்பரம்

24.10.2011 மாலை சிதம்பரம் தெற்கு சன்னதி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறைப் பேராசிரியர் த.செயராமன், தமிழக இளைஞர் முன்னணி சிதம் பரம் நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பேராசிரியரின் உரை அவ்வழியே போவோர் வருவோரையும் ஈர்த்து கட்டிப் போட்டது.  தங்கள் பகுதியில் இப்பரப்புரையை நடத்துவதாக பலர் உறுதிகூறிச் சென்றனர்.

கீரனூர்

கீரனூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி செய லாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு கண்டன உரையாற் றினார்.

திருச்சி

திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள காதி கிராப்ட் முன்பு, 22.10.2011 அன்று மாலை  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே. பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானு மதி, தோழர் ஆத்மநாதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கிளைச் செயலாளர் கவிஞர் இராசா இரகுநாதன், ம.திமு.க. இலக்கிய அணி புலவர் க.முருகேசன், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இனியன், த.ஓ.வி.இ. அமைப்பாளர் தோழர் நிலவழகன், தமிழ்நாடு வழக்கறிஞர் பேரவை தோழர் இளமுருகன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தோழர் பாட்டாளி, தோழர் லெட்சுமணன் (த.தே. பொ.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

23.10.2011 அன்று திருச்சி த.தே.பொ.க. நிர்வாகிகள் கூடங்குளம் இடிந்தகரையில் நடை பெற்று வருகிற உண்ணாப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து உண்ணாப் போராட் டத்திலும் பங்கெடுத்துக் கொண்டனர். வழக்குரைஞர் த.பானுமதி வாழ்த்துரை வழங்கினார்.

லிபியா: கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் அடுப்புக்குள்


சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க விளையாட்டில் சிக்கிவிட்டதற்கு லிபியா ஒரு எடுத்துக்காட்டாகிவிட்டது.

லிபியத் தலைவர் மும்மர் கடாபி 2011 அக்டோபர் 20 அன்று லிபியாவின் சிர்த்தே நகரில் குண்டடிபட்டு ஒரு கழிவுநீர்க் குழாயில் பதுங்கியிருந்தபோது, அவரை வெளியே இழத்து வந்து இரத்தம் சொட்ட சொட்ட சித்திரவதை செய்து அடித்தேக் கொன்றுவிட்டனர், அந்நாட்டின் இடைக்கால அரசின் படையாட்கள்.

கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் கடந்த 2011 பிப்ரவரி 17 முதல், பெங்காசி நகரில் தொடங்கிய மக்கள் போராட்டம் விரைவிலேயே பிரித்தானிய, பிரஞ்சு, அமெரிக்க வல்லரசுகளின் பகடைக்காயாக மாறிப் போனது.

தனது ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வழக்கம் போல் கடுமையான அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினார் கடாபி. லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீது கண்ணாக இருந்த வல்லரசுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன. தாங்கள் தலையிடுவதற்கு ஏற்றாற்போல் மேற்கத்திய ஊடகங்கள் வழியாக வதந்திகளைப் பரப்பின. அப்பாவி மக்கள் மீது கடாபி அரசு வான்தாக்குதல் நடத்துவதாகவும், தனக்கு எதிராகப் போராடும் பழங்குடி இனப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவுத் தாக்குதல் நடத்துவதற்காக லிபியப்படை வீரர்களுக்கு வயாக்ரா மாத்திரை வாங்கி கடாபி அரசு விநியோகித்ததாகவும் கதைகட்டி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வான் முற்றுகையிடுவது என ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டனர். லிபிய வான்பரப்பில் கடாபியின் போர் விமானங்களைத் தடுப்பது என்ற பெயரால் நேட்டோ படைகள், முழுவீச்சிலான ஆக்கிரமிப்புப் போரை தொடங்கினர். கலகப்படையினருக்கு ஏராளமான ஆயுதங்கள் வழங்கின.

நேட்டோவின் ஆதரவோடு, கலகப்படையினர் நடத்திய கடும் தாக்குதலில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று லிபியத் தலைநகர் திரிபோலி வீழ்ந்தது. அதைத் தெடர்ந்து கடாபி இனி லிபியாவின் அதிபரல்ல என உலக நாடுகள் அறிவித்தன. லிபியாவின் தேசிய இடைக்கால ஆட்சிக்குழு லிபியாவின் பிரதிநிதியாக கடந்த செப்டம்பர் 16இல் ஐ.நா.வில் ஏற்கப்பட்டது.

கண்மூடித்தனமான வான்தாக்குதலில் கருப்பின ஆப்ரிக்கர்கள் மீதான இனக்கொலைத் தாக்குதலும் தொடர்ந்தன. பின்வாங்கி ஓடிய கடாபியும், அவரது படையினரும் கடைசியில் கடாபி பிறந்த ஊரான சிர்த்தேயில் சிக்கினர். அக்டோபர் தொடக்கத்திலிருந்தே சிர்த்தே நகரம் நேட்டோ வான்தாக்குதலில் தரை மட்டமானது. அக்டோபர் 20 அன்று ஒரு சிறியப் படைக்குழுவினருடன் பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த கடாபி அணியினர் மீது நேட்டோ நடத்திய வான் தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் உடல் சிதறி மாண்டனர். கால்களில் குண்டுக் காயங்களோடு கடாபியும் அவரது மகன் முட்டாசின் கடாபியும் சிக்கினர். அவர்களை லிபிய இடைக்கால அரசப் படையினர் அடித்தேக் கொன்றனர்.

லிபியாவின் புதிய ஆட்சி போர்க்குற்றங்களோடு இணைந்தே உருவாகியிருக்கிறது. இசுலாமிய சட்டங்கள் வழி இனி லிபியாவின் ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. உலக வல்லரசுகளின் படை உதவியோடும், அரசியல் ஆதரவோடும், தூக்கி நிறுத்தப்பட்டுள்ள லிபியாவின் புதிய ஆட்சி லிபிய மக்கள் சார்ந்த ஆட்சியாக இருக்குமா என்பது ஐயமே.

எண்ணெய் வளத்தைக் கொண்டு, லிபியாவின் முகத்தோற்றத்தையே மாற்றியவர் கடாபி. மிகவும் வறுமைப்பட்டிருந்த அந்நாட்டில் கடாபி ஆட்சியில் கல்வியற்றவர்களோ, வீடற்றவர்களோ, அடிப்படை வசதியற்றவர்களோ யாருமில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில், எகிப்தியத் தலைவர் நாசரைப் போல், தற்சார்பான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையில் இருந்த மும்மர் கடாபி 2001க்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் நண்பரானார். ஆயினும், அவரது புதிய நண்பர்களே அவரது வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தனர்.

நாம் ஏற்கெனவே 2011 மார்ச்16-31 ஆசிரிய உரையில் சுட்டிக்காட்டியது போல் லிபியா கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பித்து எரியும் அடுப்புக்குள் வீழ்ந்திருக்கிறது. லிபிய மக்கள் விழிப்புணர்வு பெற்று தற்சார்பான சனநாயக ஆட்சியை நிறுவிக் கொள்ளத்  தொடர்ந்து போராட வேண்டியது தேவையாகிவிட்டது.

தலையங்கம் : எதிர்த்தால் மட்டும் போதாது மாற்றுத் திட்டம் வேண்டும்


இந்தியாவின் காலனியாகத்தான் தமிழ்நாடு உள்ளது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கூறுவது, நமது அகநிலை சார்ந்த, சொந்தக் கருத்தன்று. அது புறநிலை உண்மை என்பதைத் தமிழக முதல்வர் செயலலிதாவின் அண்மைக்கால அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த உண்மைகளை இந்த அளவிற்காவது அம்பலப்படுத்தியதற்காகத் தமிழக முதல்வரைப் பாராட்டலாம்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 22.10.2011 அன்று நடந்த “தேசிய வளர்ச்சி மன்றக்”கூட்டத்தில் தமிழக முதல்வர் இந்திய ஏகாதிபத்தியம் மேலும் மேலும் “நடுவத்தில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்வதையும்”, “மாநிலங்களைக் கவர்ச்சிமிக்க மாநகராட்சிகளாக மட்டுமே வைத்திருப்பதையும்” அதிகாரமுறையிலான உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் அம்மாநாட்டிற்குப் போகாததால், அவரது உரையை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படித்துள்ளார்.

""முதலமைச்சர்களைக் கொண்ட இந்தத் தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டம் வெறும் சடங்காகத்தான் நடக்கிறது. இந்தக் கூட்டம் நல்ல பலனைத் தருவதில்லை என்ற எனது வலுவான கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்”, என்று தொடங்கி, பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் செயலலிதா.

""கடந்த சில மாதங்களாக நடுவணரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் பாசிசத்தன்மை வாய்ந்ததாகவும் சனநாயகத்திற்கு எதிரானதாகவும் அமைந்துள்ளன”, என்றார்(தினத்தந்தி, 23.10.2011).

""வகுப்புவாத மற்றும் இலக்கு நோக்கிய வன்முறை(நீதித்துறைக்கான அணுகுமுறை மற்றும் சீர் செய்தல்)” என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர சட்டமூலம்(மசோதா) அணியம் செய்துள்ளது இந்திய அரசு. இதனைக் கடுமையாக எதிர்த்து அப்போது பிரதமருக்கு மடல் எழுதினார் செயலலிதா. இப்போது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இந்திய அரசின் பாசிச மற்றும் சனநாயகத்திற்கெதிரான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக மேற்படி சட்ட மூலத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.

“மாநில அரசுகளை மீறி, நடுவணரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டமானால் மாநில அரசுகள் முற்றிலும் அதிகாரமில்லாதவையாகவும், முழுமையாக நடுவணரசின் தயவை நாடி நிற்பவையாகவும் மாற்றப்படும்” என்று கூறியுள்ளார்.

மாநில அரசுகளின் எதிர்ப்புகளைச் சட்டை செய்யாமலும் அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமலும், தொழிலியல் கல்வியில் ‘மூர்க்கத்தனமாக’(ளிதீstவீனீணீtமீ) அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வை நடுவணரசு கொண்டு வருகிறது என்று சாடியுள்ளார்.(தி இந்து, 23.10.2011).

“நடுவணரசு புதிதாகக் கொண்டு வரவுள்ள சரக்குகள் மற்றும் சேவை வரி(நிஷிஜி) மாநில அரசின் நிதித் தன்னாட்சியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இதை ஏற்பது கடினம். மாநில அரசிடம் தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறது” என்று அவ்வுரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுண்டைக்காய் சிங்களக் கடற்படையினராலும், சிங்களப் போக்கிலிகளாலும் கொல்லப்படுவதையும் தாக்கப்படுவதையும் தடுக்காத இந்திய அரசின் மாறுபட்ட மனநிலையை ஏற்கெனவே பிரதமருக்கு எழுதிய மடலில் வலுவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு தடவையும் மீனவர்கள் உயிர்பறிக்கப்படுவதைத் தமிழ்நாட்டுச் சிக்கலாக மட்டுமே பார்த்து, ஒதுங்கிக் கொள்கிறது இந்திய அரசு; அதை அனைத்திந்திய சிக்கலாக நடுவணரசு பார்ப்பதில்லை. எல்லைப் பகுதியில் பாகிஸ்தானோ, சீனாவோ துப்பாக்கிச் சூடு நடத்தினால் இந்திய அரசு எப்படி எதிர்வினை புரிகிறதோ அப்படி இந்தியாவின் தெற்கு எல்லையில் இலங்கை துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்களைக் கொல்லும் போது எதிர்வினை புரிய வேண்டும்” என்று பிரதமருக்கு எழுதிய மடலில் செயலலிதா குறிப்பிட்டிருந்தார். (தினத்தந்தி, தி இந்து, 12.10.2011).

இதே கருத்துகளை தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்திற்கான உரையிலும், அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக மீனவர்களின் உயிர்கள் பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்று கருதுவதால் இந்தச் சிக்கலில் நடுவணரசு வலுவான எதிர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை” என்று வளர்ச்சி மன்ற உரையில் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில், பாதுகாப்பு ஆய்வுக்குழு பரிந்துரை வழங்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்று தூதுக்குழுவிடம் உறுதியளித்து விட்டு, பாதுகாப்புக்குழு அமைக்காமல் பணிகளைத் தொடர்ந்த பிரதமரின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தும் வகையில் முதல்வர் செயலலிதா காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்(19.10.2011).

தமிழகத்திற்குச் சிறப்பு நிதி தருமாறு முதல்வர் செயலலிதா பிரதமரிடம் கேட்டிருந்தார். தமிழகத்திற்குத் தர மறுத்த பிரதமர், கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி அளித்த ஒருதலைச் சார்பு அணுகுமுறையையும் தமது உரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

2004லிருந்து 2011 அக்டோபர் வரை 13 தடவை டீசல் விலையை உயர்த்தியதையும்(ரூ. 29.30 லிருந்து ரூ. 43.80), 19 தடவை பெட்ரோல் விலையை உயர்த்தியதையும்(ரூ. 41.25லிருந்து ரூ. 67.22), சமையல் எரிவளி விலையை ரூ. 249.02லிருந்து ரூ. 404.40 ஆக உயர்த்தியதையும் சுட்டிக் காட்டி சாடியுள்ளார் வளர்ச்சி மன்ற உரையில்.

தமிழக முதல்வரின் மேற்கண்ட நிலைபாடுகள், இந்திய அரசுக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஞாயமானவை. அதற்கு மேலும் முதல்வர் தமிழக மக்களுக்காக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், எரிவளி விலை அடிக்கடி உயர்த்தப்படுவதைக் கண்டித்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் நரிமணம், அடியக்கமங்கலம், கமலாபுரம், கோயில் களப்பாள், புவனகிரி ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோலிய உற்பத்தி நிலையங்களையும் நரிமணம், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையையும், குத்தாலம் எரிவளி ஆலையையும் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசைக் கேட்க வேண்டும். இவை கிடைத்தால் மலிவு விலையில் பெட்ரோலியப் பொருள்களைத் தமிழக மக்களுக்கு வழங்க முடியும்.

பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாடுகளிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்து கொள்ளும் உரிமையை வழங்குமாறும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிதாதப் பெட்ரோலியம் எடுக்கும் உரிமையை குசராத்தி சேட்டு நிறுவனமான ரிலையன்சுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. தனியாருக்கு உரிமை வழங்கும்போது தமிழக அரசிடம் நரிமணம் பெட்ரோலியத்தை ஏன் ஒப்படைக்கக் கூடாது?

தமிழகத்தின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் கர்நாடகத்திற்கும், 9 கோடி யூனிட் கேரளத்திற்கும், 6 கோடி யூனிட் ஆந்திரப்பிரதேசத்திற்கும் போகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய மின்பற்றாக்குறை 1 நாளைக்கு 22 கோடி யூனிட். வெளி மாநிலங்களுக்குப் போகும் நெய்வேலி மின்சாரம் 1 நாளைக்கு 26 கோடி யூனிட்.

எனவே, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு முதல்வர் செயலலிதா நடுவணரசைக் கேட்க வேண்டும். நெய்வேலி அனல் மின்நிலையம், நிலக்கரிச் சுரங்கம் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறும் இந்திய அரசை அவர் கேட்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின்திட்டத்தை முற்றாகக் கைவிடுமாறு நடுவணரசைத் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க, இந்திய அரசு முன்வராத நிலையில், அது இனியும் முன்வராது என்று தெரிந்து கொண்ட நிலையில், இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பதை விட, தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி செயலில் இறங்க வேண்டும்.

ஊரகப்படை(பிஷீனீமீ நிuணீக்ஷீபீ) போல் 'தமிழக மீனவர் தற்காப்புப்படை' ஒன்றை கடலோர மீனவர்களிலிருந்து உருவாக்க வேண்டும். ஊரகப்படைக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கிறது. மீனவர் தற்காப்புப் படைக்கும் தமிழக அரசு துப்பாக்கி வழங்க வேண்டும். இந்த ஏற்பாடே தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும்.

இந்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்களை எடுத்துச் சொல்லி கண்டித்தால் மட்டும் போதாது. மாற்றுத் திட்டங்களையும் தமிழக முதல்வர் முன்வைத்து மக்கள் வலிவைத் திரட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றுத் திட்டங்களை முதல்வர்  வைக்கும் போது, தமிழக மக்கள் இனத்தற்காப்பு உணர்ச்சியோடு ஒருங்கு திரண்டு அத்திட்டங்களை செயல்படுத்த அணிதிரள வேண்டும்.